பக்கம் எண் :

பிரமன் சிருட்டி பெறு படலம்275

சிறப்புப்பொருந்திய அருளினாற் செய்கின்ற படைத்தற் றொழிலைச் செய்யவாராமையினானே மனத்தின்கண் உவகையிலனாயினன்.

(வி - ம்.) காராக்கிரகம் - சிறைச்சாலை. உம்மை - இறந்தது தழீஇயது. ஓகை - களிப்பு.

(3)

 அந்தோ விதுநாஞ் செயலாம் வழிமற்
 றெந்தோ வெனவெண் ணியசூழ்ச் சியினான்
 முந்தா ரணமுந் தெரியா முதல்வன்
 தந்தா னவனே தரவல் லவனே.

(இ - ள்.) ஐயோ இப்படைப்புத் தொழிலை (இனி) யாஞ் சுதந்தரமாகச் செய்யும் மார்க்கம் என்னையென்று பலகாலுமெண்ணிய சூழ்ச்சியை யுடையவன், வேதங்களுங் கண்டறியாத முதல்வனாகிய சிவபெருமானே இப்படைப்புத் தொழிலை முன்னர்த் தந்தனன். அவனே இனியுந் தரவல்லவனாவான்.

(வி - ம்.) அந்தோ - ஐயோ, இரக்கக்குறிப்பு. வழி - மார்க்கம். எந்தோ வென்பது தெலுங்கச்சொல்; அது என்னையென்னும் பொருடந்து நின்றது. "அதெந்துவே யென்றருளாயே" எனத் திருவாசகத்தின் வருதலுங் காண்க. முந்துதந்தானெனக் கூட்டுக. இன்னுமவன் றருவானென்பது குறிப்பெச்சம்.

(4)

 தலைவன் சரணஞ் சரணம் புகினம்
 உலமந் தபவத் துயரோ டுமிவண்
 அலமந் தவருந் துயருந் தவிர
 நிலவுந் தொழிலென் றுநினைந் தனனே.

(இ - ள்.) (செத்துப் பிறக்கின்ற வென்போன்ற தேவர்கட்கெல்லாந்) தலைவனாகிய சிவபெருமான் றிருவடிகளைப் பற்றுக்கோடாகப் புகின் நமது வருத்துகின்ற பிறவித்துன்பத்தோடும் இப்படைப்புத் தொழிலின்கட் சுழலுகின்ற அரியதுன்பமும் நீங்க இப்படைப்புத் தொழிலும் நிலைபெறுமென்று நினைந்தனன்.

(வி - ம்.) சரண் - பாதம், பற்றுக்கோடு. உலமந்த - வருத்துகின்ற. அலமந்த - சுழல்கின்ற. நிலவும் - நிலைபெறும்.

(5)

 உத்தா லகவா ரணியப் பெயருற்
 றித்தா ரணிபோற் றவிருந் தபதி
 வித்தா ணவமாய்க் கும்விழுத் தவரோ
 டத்தா னமகன் றடைவுற் றனனே.

(இ - ள்.) உத்தாலக வனமென்னும் பெயரினைப்பெற்று, இவ்வுலகின் கணுள்ளவர்களெல்லாந் துதிக்கவிருந்த திருக்குற்றாலமென்னுந் திருப்பதியை ஆணவமாகிய விதையைக் கெடுக்குஞ் சிறந்த தவத்தையுடைய முனிவர்களுடன் அச் சத்தியலோகத்தைவிட்டு நீங்கி அடைந்தனன்.