| | "வள்ளி வாரிய குழியின் வளர்பொன்னும் வயிரமு மிமைக்குஞ் | | | சுள்ளி வேலியி னீங்கித் துறக்கம்புக் கிடுமெனச் சூழ்ந்து | | | வெள்ளி வெண்டிரள் விசித்து நிலத்தொடு தறிபுடைத் தவைபோற் | | | றுள்ளி வீழுய ரருவி வனகிரி தோன்றிய தவணே" |
என்ற சிந்தாமணி கனகமாலையாரிலம்பகம் ஒன்பதாஞ் செய்யுளின் கருத்தும் ஒத்திருத்தல் காண்க. (35) | | கொடிச்சி மார்விழிக் கூர்ங்கணை குளிப்பகா னவர்தோள் | | | வடித்த வாங்கவர் வார்கணை குளிப்பமால் வேழந் | | | தடித்த வேழத்தின் கோடுகள் குளிப்பபூந் தருக்கள் | | | கடித்த பூந்தருக் கோடுகள் குளிப்பவான் கங்கை. |
(இ - ள்.) குன்றத்தியர் விழிகளாகிய கூரிய அம்புகள் குன்றவாணர்கள் தோள்களின்கண் மூழ்குவன; அக்குன்றவாணர்களுடைய கூரிய நீண்ட வம்புகள் மதமயக்கத்தையுடைய யானையின்மேன் மூழ்குவன; பருத்த யானைகளின் கொம்புகள் பூக்களையுடைய மரங்களைக் குத்திக் குழிசெய்வன; வாசனையை யுடைய மலர்களையுடைய மரங்களின் கிளைகள் ஆகாய கங்கையின்கட் டோய்வனவாம். (வி - ம்.) தடித்த - பருத்த; கடித்த வாசனையையுடைய; கடி - வாசனை; ஆங்கு - அசை; இஃதொற்றை மணிமாலை யணி. (36) | | விழிக்கு டைந்தமான் செவிகண்மெல் லியனல்லார் தடிந்தவ் | | | வுழிக்க ஞற்றியாங் குயர்பணை கண்பொதி பாளை | | | கழிக்கு மற்றவை மறையவெண் கதிர்மணி யுகுக்குங் | | | கொழிக்கு நித்தில மறையமேற் கொட்டும்வண் டோரை. |
(இ - ள்.) (குறிஞ்சி நிலத்தின்கணுள்ள) மெல்லிய இலக்கணமமைந்த பெண்கள் தங்கள் விழிக்குத் தோற்ற மான் கூட்டங்களின் செவிகளைக் குறைத்து அவ்விடத்தே நிறைத்தாற்போல உயர்ந்த மூங்கில்களானவை தம் கணுக்களைமூடிய மடல்களை நீக்கும்; அம்மடல்கள் மறையும் வண்ணம் வெள்ளிய ஒளியுடைய முத்தங்களைச் சொரியும், அங்ஙனஞ் சொரிந்த முத்தங்கள் மறையும் பொருட்டு அவைகளின்மீது அரிசியைக் கொட்டும். (வி - ம்.) தடிதல் - குறைத்தல். 'தடிந்தெழிலி' என்றதும் இப்பொருட்டாதல் காண்க. கஞற்றல் - நிறைத்தல்; கண் - வரை, கணு; தோரை - மூங்கிலரிசி; பணை கழிக்கும் உகுக்கும் கொட்டுமென வினை முடிவு செய்க; மூங்கிலின்பாளை மான் செவிபோலக் கழன்று விழுமென்பதனை "நுண்பொறி மான் செவிபோல வெதிர்முளை கண்பொதி பாளை கழன்றுகும் பண்பிற்றே" என்னும் 43 கலியானுணர்க. (37) | | மழைத்த கார்முகி லகடுகீண் டெழுந்துவா னோங்குந் | | | தழைத்த வேய்நுதிக் களிமயி லகவுவ சமர்க்கட் | | | குழைத்த மாமரங் கீழ்ந்தவன் கோயின்முன் மணியின் | | | இழைத்த கேதனத் திளமயி லகவலோ டியையும். |
|