(இறைவன்றடத்தம் சொரூபம் என்னுமிருவடிவங்களில்) சொரூப நிலையை யருளல். (7) | ஐந்தொழிலி யற்றரசி ருக்கைகயி லாயம் | | ஐந்தொழில்க டந்தவரு ளாகுமஃ திங்கண் | | அந்தின்மிக வுந்தெரிவு றுக்குமடை வில்லை | | அந்தவரு ளுக்குரிய தாங்கணிக வெற்பு. |
(இ - ள்.) படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னுமைந்தொழிலினையுஞ் செய்கின்ற அரசிருக்கை கைலாயமாகும். இவ்வைந்தொழிலினையும் நீங்கிய அருளாகிய நீ விரும்பிய முத்தி இக்கைலாயத்தின்கட் செவியறிவுறுக்கு முறைமையுடையதன்று, அந்த வருளினுக்குரியதாகுந் தணீகைவரை. (வி - ம்.) அஃது : நீ விரும்பியமுத்தி. அந்தில் : அசை. ஆன்மாக்களனுக்கிரகித்தால் அடையப்படுவது முத்தியாகலின் அதனை (ஐந்தொழில் கடந்தவருள்) என்றார், (8) | ஒருமறை நாடரிய வுண்மையெனு ஞானம் | | ஆரவருள் பெற்றடிய ழுந்துமத னாற்சீ | | பூரணகி ரிப்பெயர்பொ ருந்துமள வில்லா | | ஏரணவு நம்முருவ மாயிலகு மன்றே. |
(இ - ள்.) யாவரும் ஆராய்தற்கருமையான உண்மை யறிவினை அருளாற் பொருந்தப்பெற்று நமது திருவடியின்கண்ணே இரண்டறக்கலந்து நிறைந்து நிற்குந்தன்மையால் சீபூரணகிரியென்னுந் திருநமாத்தினைப் பொருந்தும், அளவிட முடியாத அழகு பொருந்திய நமது திருவாகி விளங்கும். (வி - ம்.) அடியிலழுந்தி நிறைவைப் பெறுதலால் சீபூரணகிரியென்றும் பெயர்த்தாயதென்க. பூரணம் - நிறைவு. (9) | எங்கணெவ ருஞ்சிறிது மேரருந மக்கும் | | அங்கணுயிர் யாவுமடி சேரும்வகை நாடித் | | தங்குமிளை யோனருட ருங்குரவ னானான் | | புங்கவன வற்குநிகர் பூரியரும் ளிள்ளார். |
(இ - ள்.) நமது திருவுருவமாக விளங்குந் தணிகைமலையின்கண் ஆன்மாக்களெல்லாந் திருவடியின்கண் இரண்டறக்கலக்கும் வகையினை யாராய்ந்து எழுந்தருளியிருக்கும் முருகக்கடவுள் எவ்விடத்தும் எவருஞ் சிறிது மொப்பாகாத நமக்கும் அருளினைத் தருகின்ற பரமாசாரியனானான். யாவரினு முயர்ந்தோனாகிய அவனுக்கு (மற்றொருவரை) ஒப்பாகக் கீழோருஞ் சொல்லார். (வி - ம்.) ஏர் - உவமவுருபு. நமக்குங் குரவனென முடிக்க. நாடித்தங்கிய வென்னும் பெயரெச்சம் இளையோன் என்னும் பெயர் கொண்டு முடிந்தது. புங்கவனாகிய அவனென்க. பூரியோர் - கீழோர். (10) |