பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்59

வரிவராற் பிறழ்வயல் குவளை கட்பவர்" என்னும் சிந்தாமணி (பதுமை. 83) செய்யுளா னறிக. மருதம் - மருதப்பண். பாய் - பரவிய. கட்ப - களைய. தடம் - பெருமை. "தடவும் கயவும் நளியும் பெருமை" என்னும் தொல்காப்பியத்தா னுணர்க. உள்ளார் என ஒருசொல் வருவித்து முடிக்க.

(100)

 பணைம லர்க்களை பற்றிப்ப றித்தலும்
 பிணைய னம்பெடை யோடிரி வுற்றன
 விணைம லர்க்குல மென்னக் கவற்றுவார்
 துணையு நம்மையு மென்று துணிந்தென.

(இ - ள்.) (கடைசிமார்) வயல்களில் மலராகிய களைகளைக் கையாற் பற்றிப் பறிக்க (அதனையறிந்த) விருப்பினையுடைய அம்மலரிலிருந்த அன்னச் சேவல்கள் (நடையாலொக்கும்) நம்மையும் ஒன்றோடொன்றிணைந்த மலர்க்கூட்டங்களை வருத்துதல்போல வருத்துவார்களென்று துணிந்தாற்போல் பெட்டை யன்னத்தொடு செல்லுதலுற்றன.

(வி - ம்.) துணையும் நம்மையும் மலர்க்குலமென்னக் கவற்றுவார் என்று துணிந்தனபோல இரிவுற்றன என்க. துணை - ஒப்பு. துணிந்தென - துணிந்தாற்போல. (மள்ளப்பெண்கள்) வயல்களிலுள்ள மலராகிய களையைக் (கையாற்) பற்றிக் களைந்த காலத்தில் அம்மலர்களிலே சேர்ந்திருந்த அன்னச்சேவல்கள் அவரை நடையாலொத்திருக்கும் நம்மையும், மலர்க்கூட்டங்களைக் களைந்தாற்போல, வருத்துவார்களென்று துணிந்தாற்போலத் தம் பெட்டை யன்னங்களோடு ஓடின என்க.

(101)

 செங்கை தாடி தலைக்குய மானனம்
 பொங்கு தாமரைப் போதெனற் கேற்புறப்
 பங்க மோடு பயின்றன கட்டுலாம்
 அங்க ணாற்றுக்கா லாட்டியர்க் கென்பவே.

(இ - ள்.) அம் மருதநிலத்தின்கண் களைகளைந் துலாவுகின்ற கடைசியர்க்குச் செம்மை நிறம்பொருந்திய கரங்களும், தாள்களும், தேமலோடு கூடிய தனங்களும், முகங்களும் அழகுமிகுந்த தாமரை மலரென்று (கவிகள்) சொல்லுதற்குப் பொருந்த அவ்வுறுப்புக்கள் சேற்றோடு பழகியிருந்தன.

(வி - ம்.) திதலை - தேமல். குயம் - தனம். ஆனனம் - முகம். கட்டு - களைந்து. ஆற்றுக்காலாட்டியர் - மருதநிலப் பெண்கள். "பங்க மோடு பயிறல் கைகால் முதலிய அவயவங்களிற் சேறுதங்கப் பெற்றிருத்தல். தாமரைக்குப் பங்கயமென்னும் பெயர் காரணக் குறியாம்.

(102)

 பகைமை தோன்றப் பறித்தடு காலையும்
 முகைஞெ ரிந்தமு டிப்பன மோப்பன
 தகைக ளுண்பன சாத்துய ரேய்க்கினும்
 அகைந லத்தனுங் காரமைந் தாரரோ.