பக்கம் எண் :


556திருத்தொண்டர் புராணம்

 

பெருந்தவத்தெம் பிஞ்ஞகன்காண் பிறைசூ டிகாண்
         பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்
மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண்
         வானவர்கள் தாம்வணங்கு மாதே வன்காண்
அருந்தவத்தா ளாயிழையா ளுமையாள் பாக
         மமர்ந்தவன்கா ணமரர்கடா மர்ச்சித் தேத்த
விருந்தவன்கா ணெழிலாரும் பொழிலார் கச்சி
         யேகம்பன் காணவனென் னெண்ணத் தானே.

5

முந்தைகாண் மூவரினு முதலா னான்காண்
         மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத்
தந்தைகாண் டண்கடமா முகத்தி னாற்குத்
         தாதைகாண் டாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்
சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச்
         சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறு
மெந்தைகா ணெழிலாரும் பொழிலார் கச்சி
         யேகம்பன் காணவனென் னெண்ணத் தானே.

9

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- முன் பதிகக் குறிப்புப் பார்க்க.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) உரம் - வலிமை. ஒல்க - அஞ்ச. உணர் - மெய்ஞ்ஞானம் - உணரவேண்டிய மெய்ஞ்ஞானம். "அறிவறிந்த" என்புழிப்போலக் கொள்க. விரித்தவன் - உபதேசித்தவன். விரித்த - அவ்வாறு விரித்த. வியனுலகில்...தெரித்தவன் - "பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகியெங்கும்" (முன் பதிகம் - 2). உயிர்களுக்குள் நிறைந்து உலகிற் றோற்றுவித்தல் கருத்து. சில்லுருவாய் - அதி நுண்ணிய நிலையின் உருவக முதலாக. - (2) நேசக்...குழகன்காண் - "வருந்தான்காண்...வண்ணம்" (முன் பதிகம் 9). மங்கை பங்கன் - பாகமமர்ந்தவன் (5). பாகம் சேர்த்தினான் (70. இக்கருத்தை ஆசிரியர், "பாகம்பெண் ணுருவானை" (1593) என்று விதந்து எடுத்துக் காட்டினர். - (3) பொறையவன் ஓங்கும் - ஏழ்பூமி தாங்கி ஓங்கும் பொறை என்க. "பொறை தீர்ப்பான்" (முன் பதிகம் - 3) என்ற கருத்து. புண்டரீகப் போது - அன்பர்களது இதயதாமரை. மறையவனை - பிரமனை. மாசுணம் - பாம்பு. எல்லி - ஊழி. - (5) பேதையேன்...மந்திரங்களாயினான்காண் - நாயனாரது சரித அகச்சான்று. அருந்தவத்தா ளாயிழையாள் - காமாட்சியம்மையார். தல சரிதக் குறிப்பு (1134). - (6) சிலந்தி - திருவானைக் காவின் சரிதக் குறிப்பு. பார் ஆள் செல்வம் - கோச்செங்கட் சோழராகி உலகாண்ட சிறப்பு. - (7) சமயம்...தலைவன் - "ஆறு சமயத் தவரவரைத், தேற்றுந் தகையன" என்றபடி ஆறு சமயங்களிலும் அவ்வவர் பக்குவப் பேதத்துக்கேற்ப விளங்குபவன். - (8) தொண்டு படுதல் - தொண்டராகிப் பணிசெய்தல். உண்டுபடு - உண்டாடல்படச் செய்யும். உண்ணப்பட்ட என்றலுமாம். வண்டுபடு - வண்டுகள் படியும். - (9) முந்தை - எல்லார்க்கு முன்னவன். "முளைத்தானை யெல்லார்க்கு முன்னே தோன்றி" (ஆலவாய் - தாண்)). தண்கடமா முகத்தினான் - விநாயகர். விநாயகரைப் பாராட்டிய சில்லிடங்களுள் இஃதொன்று. இப்பாட்டுக் கணபதியையும் முருகவேளையும் ஒருங்கு போற்றிய சிறப்புடையது. சிவன் - முதல்வன். இன்பஞ் செய்வோன். - (10) மின்னிசையும் வெள்ளெயிற்றோன் - வெள்ளிய கோரப்பற்களையுடைய அரக்கன் - இராவணன். இன்னிசை - சாமவேதம். அடி அடர்ப்ப - அடியால் அடர்த்து.