பக்கம் எண் :


760திருத்தொண்டர் புராணம்

 

கற்பனை

1.

நல்லொழுக்கத்துள் நிற்கும் குடிகள் நிறைந்திருப்பது நாட்டுக்குச் சிறப்பு (1267).

2.

உலகுக்குச் சிவநெறி காட்டும் ஆசாரியர்கள் அவதரிக்கும் பேறு பெறுவது நாட்டுக்குப் பெரும் பேறாகும் (1276).

3.

சிவம் பெருக உள்ள ஊர் சிறந்த ஊர் (1277).

4.

வேளாளர்க்கு விருந்தோம்பலும் சுற்றந்தழுவுதலும் சிறப்பாயுரியன (1281).

5.

சில ஆண்டுகள் இடையீடுள்ளனவாய் மகப்பேறுகள் பெறுதல் நல்வாழ்க்கைக்குரியது (1283).

6.

ஆண்மக்களுக்குச் சென்னி மயிர் நீக்கும் சடங்கு, கலை பயில்வித்தல் முதலிய சடங்குகள் செய்வித்தல் முந்தையோர் மரபு (1285).

7.

பெண்மக்களுக்கு மண வயது பன்னிரண்டென வகுத்தது தமிழர் மரபு (1287).

8.

பெண்ணை மணம் பேசிப் பெற்றோரிசைவு கொண்டு மணமுடித்தல் தமிழர்களுள் வழங்கிய வழக்கு (1288).

9.

மணம் பேசுங்காலத்து மனமகனிடத்துச் சிவன்பாலன்பும், அரசனிடத்தருளும், வீரமும், வனப்பும் முதலிய குணங்களுடைமை கண்ட பின்பே பெண் பெற்றோர் மணமிசைவது வழக்கு (1289).

10.

மேலாகிய உழவுத் தொழிலேயன்றி, வேந்தற்குற்றுழி வினைமேற்சென்று போர் புரிந்து நாடு காவலுக்குத் துணைசெய்வதும் வேளாளர்க்குரிய தொழில்களுளொன்று (1291).

11.

யாக்கை நிலையாமை என்பது தொன்றுதொட்டு வரும் உண்மை (1292).

12.

கணவனா ரிறந்தபோது தானும் உயிர்நீத்து அவனுடனே சேர்வது கற்பு நெறி வழுவாத கடமையாகிய ஒழுக்கமாய்க் கொண்டனர் தமிழ் மாதர்கள் (1293).

13.

அரசனுக்காக நாடு காவலின் பொருட்டுப் போர்செய்து உயிர் துறத்தல் புகழ் தருவதெனக் கொண்டது தமிழர் வழக்கு (1295).

14.

மணம்பற்றிய புறச்சடங்கு நிகழாவிடினும், பெற்றோர் இசைவுதந்த வளவில் மணம் முடிந்ததாகவே முடித்துத் திலகவதியம்மையார், மணமகன் இறந்தமை கேட்டவுடன் கற்புநிலை வழுவாது தாமும் உயிர்நீத்து அவருடன் சேரத் துணிந்த செய்தி உலகுக்குப் பெரிய எடுத்துக்காட்டாகிய நல்லொழுக்கமாம் (1297).

15.

உடனே உயிர் நீத்தல் நிகழாதபோது கணவனை யிழந்தோர் கைமை நோன்பு கிடந்து தவஞ் செய்து உயிர்களுக்கு அருள்தாங்கி மனையின்க ணிருத்தலும் தமிழ் மக்களின் மரபு (1299).

16.

பெற்றோரும் மற்றோரும் இறக்கக் கண்டபோது, தேசநெறி நிலையாமை கண்டு அதனை மனங்கொண்டு ஒழுகுதல் அறிவுடையோர் தன்மை (1300).

17.

தேச நெறி நிலையாமை கண்டபோது அறங்கள் செய்தல் மதியுடையவர் செயல் (1300).

18.

சோலைகள் வளர்த்தல், குளம் வெட்டுதல், வந்தடைந்தார்க்கு வேண்டுவன அளித்தல், விருந்தளித்தல், நாவலர்க்குக் கொடுத்தல் முதலியவை உலக அறங்கள். இவை பசு புண்ணியச் செயல்களாம் (1301).

19.

உலகியல்பின் நிலையாமையைக் கண்டு துறவு பூணுதலும் அறிவுடையார் செய்கையாம் (1302).