பக்கம் எண் :

பேதை25

66.

புல்லறிவுள்ள மூடர்கள் தாமே தமக்குப் பகைவர்; அவர்கள் பாவ கருமங்களைச் செய்து கொண்டு திரிகின்றனர்; அவை கசப்பான (துன்பக்) கனிகளையேஅளிக்கின்றன.

(7)
 
  
67.

எந்தக் கருமத்தைச் செய்தால் பின்னால் மனம்நோகுமோ, எதன் பயனை அழுதுகொண்டே அனுபவிக்க வேண்டியிருக்குமோ, அது நற்செயல் ஆகாது.

(8)
 
  
68.

எந்தக் காரியத்தைச் செய்தால் பின்னால் மனம் இன்பமடையுமோ, எதன் பயனை உள்ளக்களிப் போடு அநுபவிக்க வேண்டியிருக்குமோ, அதுவேநற்செயல்.

(9)
 
  
69.

பாவம் பழுத்துப் பயனளிக்காத வரையில் மூடன் அதைத் தேன் என்று விரும்புகிறான்; ஆனால் அது பழுத்துப் பயனளிக்கையில் அவன் (ஆறாத்) துயரை அடைகிறான்.

(10)
 
  
70.

மாதக்கணக்காக மூடன் தர்ப்பைப் புல்லின் முனையினால் (துளித்துளியாக) உணவெடுத்து உண்டுவந்தாலும், தருமத்தை நன்கு அறிந்தவர்களின் பதினாறில் ஒருபகுதிக்குக்கூட அவன் ஈடாகமாட் டான்.

(11)
 
  
71.

புதிதாய்க் கறந்த பால்போலே, பாவச்செயல் உடனே புளிப்பாக மாறுவதில்லை; நீறுபூத்த நெருப்பைப் போல் கனன்றுகொண்டேயிருந்து அது மூடனைத் தொடர்கிறது.

(12)
 
  
72.

(பாவகருமத்தின் தன்மையை) மூடன் அறியும்போது அவ்வறிவு அவனுக்கு நன்மையாயில்லாத தோடு அவனுக்கு இருக்கிற இன்பத்தையும் அழித்து.அவன் தலையையும் பிளக்கிறது.

(13)