66. | புல்லறிவுள்ள மூடர்கள் தாமே தமக்குப் பகைவர்; அவர்கள் பாவ கருமங்களைச் செய்து கொண்டு திரிகின்றனர்; அவை கசப்பான (துன்பக்) கனிகளையேஅளிக்கின்றன. | (7) |
| | |
67. | எந்தக் கருமத்தைச் செய்தால் பின்னால் மனம்நோகுமோ, எதன் பயனை அழுதுகொண்டே அனுபவிக்க வேண்டியிருக்குமோ, அது நற்செயல் ஆகாது. | (8) |
| | |
68. | எந்தக் காரியத்தைச் செய்தால் பின்னால் மனம் இன்பமடையுமோ, எதன் பயனை உள்ளக்களிப் போடு அநுபவிக்க வேண்டியிருக்குமோ, அதுவேநற்செயல். | (9) |
| | |
69. | பாவம் பழுத்துப் பயனளிக்காத வரையில் மூடன் அதைத் தேன் என்று விரும்புகிறான்; ஆனால் அது பழுத்துப் பயனளிக்கையில் அவன் (ஆறாத்) துயரை அடைகிறான். | (10) |
| | |
70. | மாதக்கணக்காக மூடன் தர்ப்பைப் புல்லின் முனையினால் (துளித்துளியாக) உணவெடுத்து உண்டுவந்தாலும், தருமத்தை நன்கு அறிந்தவர்களின் பதினாறில் ஒருபகுதிக்குக்கூட அவன் ஈடாகமாட் டான். | (11) |
| | |
71. | புதிதாய்க் கறந்த பால்போலே, பாவச்செயல் உடனே புளிப்பாக மாறுவதில்லை; நீறுபூத்த நெருப்பைப் போல் கனன்றுகொண்டேயிருந்து அது மூடனைத் தொடர்கிறது. | (12) |
| | |
72. | (பாவகருமத்தின் தன்மையை) மூடன் அறியும்போது அவ்வறிவு அவனுக்கு நன்மையாயில்லாத தோடு அவனுக்கு இருக்கிற இன்பத்தையும் அழித்து.அவன் தலையையும் பிளக்கிறது. | (13) |