பக்கம் எண் :

26 தம்மபதம்

 
  
73.

மூடனான பிக்கு போலியான புகழை விரும்புகிறான்; பிக்குகளிடையே முதன்மையாயிருக்கவும் பௌத்த மடங்களில் தலைமையாயிருக்கவும் இல்லறத்தார் தன்னை வணங்கவேண்டுமென்றும் விரும்புகிறான்.

(14)
 
  
74.

மூடன், ' இல்வாழ்வாரும் துறவிகளும் இது என்னால் செய்யப்பெற்றது என்று நினைக்கட்டும். நல்லவை, தீயவை, ஆகிய காரியங்களில் அவர்கள் என்விருப்பப்படியே நடந்து வரட்டும்' என்று விரும்புகிறான். எனவே அவனுடைய இச்சையும் இறுமாப்பும் அதிகமாகின்றன.

(15)
 
  
75.

செல்வத்தை அடையும் வழி வேறு, நிருவாணத்தைஅடையும் வழி வேறு. புத்தருடைய சீடனான பிக்கு, அதை அறிந்துகொண்டு, மக்களுடைய மரியாதையை விரும்பாமல், விவேகத்தை நாடி உழைத்து வரவேண்டும்.

(16)