132. | உடைந்து போன மணி ஓசையற்றிருப்பது போல்,உன்னை நீ அடக்கிக் கொண்டு அமைதியாயிருந்தால், நீ நிருவாணத்தை அடைந்தவனாவாய்.ஏனெனில், நீ கலக்கம் நீங்கிச் செயலற்ற நிலையிலிருக்கிறாய். | (6) | | | | 133. | ஆயன் தன் கழியால் பசுக்களைப் புல்வெளிக்கு ஓட்டிச் செல்வது போல், மூப்பும், சாக்காடும் மக்களின் ஆயுளை ஓட்டுகின்றன. | (7) | | | | 134. | மூடன் பாவமான கருமங்களை அறியாமல் செய்கிறான். ஆனால் தீய மனிதன் தீயால் எரிக்கப்படுவது போல், தன் கருமங்களாலேயே வேகிறான். | (8) | | | | 135. | தண்டிக்கத் தகாதவர்களையும், குற்றமற்ற நல்லவர்களையும் தண்டித்துத் துயரப்படுத்துவோன்(பின் கண்ட) இந்தப் பத்து நிலைகளில் ஒன்றை அடைவான்; | (9) | | | | 136. | வேதனை, நஷ்டம், உடலில் சேதம், பெருநோய்கள், சித்தப்பிரமை, | (10) | | | | 137. | அரச தண்டனை, பயங்கரமான குற்றச்சாட்டு,பந்துக்களை இழத்தல், பொருள் அழிவு. | (11) | | | | 138. | அல்லது, அவன் வீடுகளில் இடிவிழுந்து எரித்தல்,மேலும், உடல் அழிந்த பின்னர் அந்த மூடன்நிரயம் புகுவான். | (12) | | | | 139. | மெய்ப்பொருளை உணராமல் அய்யத்தில் உழல்வோனை எதுவும் புனிதமாக்கி விடாது; ஆடையின்றி அலைதல், சடைத்தலை, புழுதியால்(உடல்) மாசடைதல், உபவாசம், வெறுந்தரையில் கிடத்தல், நீறு பூசுதல், அசைவில்லாமல் அமர்ந்திருத்தல் ஆகிய எதுவும் புனிதமாக்கி விடாது. | (13) |
|
|
|