பக்கம் எண் :

40 தம்மபதம்

140.

ஒருவன் அலங்காரமான உடை அணிந்திருந்தாலும், அவன் தெளிந்த சிந்தையுடையவனாயும்,அமைதியானவனாயும். (பௌத்த தரும) நியமத்தில் நிற்பவனாயும், பிரமசாரியாயும், எல்லா உயிர்களிடத்திலும் (ஹிம்சை) உணர்ச்சி நீங்கியவனாயும் இருந்தால், அவனே பிராமணன்,அவனே சமணன்1; அவனே பிக்கு.

(14)
 
  
141.

நன்கு பழக்கப் பெற்ற குதிரைக்குச் சவுக்கு அவசியமில்லை; அதுபோல் தன்னைப் பிறர் குறை கூறாதபடி பழிக்கு அஞ்சும் நாணமுள்ள மனிதன் இவ்வுலகில் இருக்கிறானா?

(15)
 
  
142.

நன்கு பழக்கப்பட்ட குதிரை, சவுக்கு மேலே பட்டதும் (வேகமாக ஓடுவது போல்) சிரத்தையுடனும், தீவிர முயற்சியுடனும் இருப்பாயாக.நம்பிக்கையாலும், நற்சீலங்களாலும், வீரியத்தாலும், தியானத்தாலும், தருமத்தை ஆராய்ந்த நிச்சயத்தாலும், ஞானம், ஒழுக்கம், கருத் துடைமை ஆகியவற்றில் நிறைவு பெற்று (உலகவாழ்வான) இந்தத் துக்கத்தை ஒதுக்கிவிடமுடியும்.

(16)
 
  
143.

நீரை நெறிப்படுத்திச் செலுத்துவர் சிற்பக்கலைஞர்; அம்பை நேராக நிமிர்த்துவர் வில்லாளிகள்; மரத்தில் (சித்திரங்கள்) பொளிப்பார்கள் தச்சர்கள்; தம்மைத்தாமே அடக்கியாள்வர் நல்லோர்.

(17)

 


1சமணன்-சிரமணன்-சாந்தி பெற்றவன், துறவி.புத்தர் காலத்திய பிராமணரையும் சமணர் என்பது வழக்கம்.