144. | இந்த உலகம் எப்பொழுதும் எரிந்துகொண்டேயிருக்கையில், இங்கே என்ன சிரிப்பு? இங்கே என்ன களியாட்டம்? இருளால் மூடப்பட்டிருக்கும் நீங்கள் ஏன் ஒளியைத் தேடுவதில்லை? | (1) |
| | |
145. | இந்த உடலாகிய வர்ணம் தீட்டிய பொம்மையைப்பார்! இது புண்கள் நிறைந்தது, (எலும்புகளாலும் சதையாலும்,) ஒன்றாகக் கோர்த்து வைக்கப்பட்டது. நோய்க்கு இடமானது, பல எண்ணங்கள் நிறைந்துள்ளது, ஆனால் நிலையில்லாதது! | (2) |
| | |
146. | இந்த உடல் நலிந்து தேய்வது, இது நோய்களின் கூடு, மிகவும் நொய்மையானது. இந்த அசுத்தக் குவியல் உடைந்து சிதறிப்போகும்; வாழ்வின் முடிவு சாவுதான். | (3) |
| | |
147. | சரத்காலத்தில் காற்றில் பறக்கும் சுரைக்கொடி போன்ற இந்த வெள்ளை எலும்புகளைப் பார்ப்பவனுக்கு என்ன இன்பம் இருக்கிறது? | (4) |
| | |
148. | அஸ்திகளைக் கொண்டு ஒரு மாளிகை கட்டி ஊனும் உதிரமும் கலந்த சாந்து பூசப்பட்டிருக்கிறது; இதிலே வசிக்கின்றன முதுமையும், மரணமும், கர்வமும், கபடமும். | (5) |
| | |
149. | அரசர்களுடைய அழகிய தேர்களும் அழிவடைகின்றன. அவ்வாறே உடலும் மூப்படைந்து அழியும்.ஆனால் நல்லோரின் தருமம் மட்டும்ஒரு போதும் முதுமையடைந்து பழுதாவதில்லை.இவ்வாறு நல்லவர் நல்லவர்களுக்கு உபதேசம் செய்கின்றனர். | (6) |