155. | ஒருவன் தன்னைத்தான் நேசிப்பானாகில், அவன் தன்னையே கவனமாய்க் காத்து வரவேண்டும்.இரவில் மூன்று யாமங்களில் ஒன்றிலாயினும் ஞானிவிழிப்புடன் கவனமாயிருப்பானாக. | (1) |
| | |
156. | ஒவ்வொரு மனிதனும் முதலில் தான் நன்னெறியில் நிலைபெறவேண்டும்; பிறகுதான் மற்றவர்களுக்குப் போதிக்க வேண்டும். இத்தகைய ஞானி கிலேசமடைவதில்லை. | (2) |
| | |
157. | மற்றவர்களுக்தப் போதிக்கிறபடி ஒருவன்தன்னைப் பண்படுத்திக் கொள்ளட்டும். தன்னை நன்கு அடக்கியாண்ட பிறகு, பிறரை அடக்கியாள முடியும். ஏனெனில் தன்னை அடக்கிக் கொள்வதே கடினமான காரியம். | (3) |
| | |
158. | ஒருவன் தானே தனக்குத் தலைவன். வேறு யார் தலைவனாயிருக்க முடியும்? தன்னை நன்கு அடக்கி வைத்துக் கொண்டால், ஒருவன் பெறு தற்கரிய தலைவனைப் பெற்றவனாவான். | (4) |
| | |
159. | மூடனுடைய பாவம் அவனிடமே பிறந்தது,அவனே படைத்தது. வயிரம் மற்ற மணிகளை அறுப்பதுபோல், அவன் செய்த பாவமே அவனை அழித்து விடும். | (5) |
| | |
160. | மாலுவக் கொடி கடம்ப மரத்தைச் சுற்றிப் படர்ந்து மரத்தையே அமுக்கி விடுவது போல், ஒருவனுடைய தீவினையே அவனை அமுக்கிவிடுகிறது;பகைவர் செய்ய விரும்பும் தீமையை அவன் தானாகவே செய்து கொள்கிறான். | (6) |