பக்கம் எண் :

44 தம்மபதம்

161.

தீமை பயக்கும் தீவினைகளைச் செய்தல் எளிது;நன்மை பயக்கும் நல்வினையைச் செய்தலே மிகவும் கஷ்டமாகும்.

(7)
 
  
162.

முனிவர்களும், மேலோர்களும், தரும வழியில் நடப்பவர்களும் போதிப்பதை மடமையுள்ள மனிதன் புறக்கணித்து விட்டுத் தீய நெறியில் செல்கின்றான்; (அதனால்) கட்டகப்புல்1 (தன் கனியாலே தன்னை அழித்துக் கொள்வது) போல்,தன்னையே அழிக்கும் கனியை-வினைப்பயனை- அடைகிறான்.

(8)
 
  
163.

ஒருவன் தானாகவே பாவம் செய்கிறான், தானே தனக்குக் கேடு தேடுகிறான். ஒருவன் தானாகவே பாவத்தை விலக்குகிறான். தானே தன்னைப் புனிதமாக்குகிறான். சுத்தமும் அசுத்தமும் அவன் செயலே; எவனும் பிறனைப் புனிதமாக்குவதில்லை.

(9)
 
  
164.

எவ்வளவு உயர்ந்ததாயினும் பிறருடைய கடமைக்காக எவனும் தன் கடமையைக் கைவிடலாகாது; தன் கடமையைக் கண்டறிந்த பின்பு, அவன் அதையே நன்றாக ஆற்றி வருவானாக.

(10)

 


1கட்டகப் புல்-நாணல் கொறுக்கைப் போன்ற ஒருவகைப் புல்; அதன் பூ கனியாக முதிர்ந்ததும் அது அழிந்துவிடும் என்பர்.