177. | எவரும் வெல்ல முடியாத வெற்றியை அடைந்தவர் புத்தர்; இந்த உலகில் எவரும் அணுக முடியாத வெற்றியை அடைந்தவர் புத்தர். அவர் எல்லையற்ற உணர்வுடையார்; (பிறப்பும் இறப்பு மாகிய) பாதையற்றவர். அத்தகைய புத்தரை எந்த வழியில் இழுத்துச் செல்ல முடியும்? | (1) |
| | |
178. | வலை போன்றதும், விஷம் போன்றதுமான ஆசைத்தளை, எதனாலும் வழி தவறாத புத்தரை- எல்லையற்ற உணர்வுள்ளவரை-(பிறப்பும் இறப்பு மாகிய) பாதையற்றவரை-எந்த வழியில் இழுத்துச் செல்ல முடியும்? | (2) |
| | |
179. | கருத்தோடு தியானத்தில் ஆழ்ந்தவராயும், பற்றற்ற விடுதலையில் திளைப்பவராயுமுள்ள மெய்யறிவு பெற்றவரைக் கண்டு தேவர்களும் பொறாமைப்படுகிறார்கள். | (3) |
| | |
180. | அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல்; அரிது அரிது மானிட வாழ்க்கை; அரிது அரிது நல்லறம் கேட்டால்; அரிது அரிது புத்தநிலை அடைதல். | (4) |
| | |
181. | சகல பாவங்களையும் நீக்குதல், நற்கருமங்களைக் கடைப்பிடித்தல், உள்ளத்தைச் சுத்தம் செய்தல்-இதுதான் புத்தருடைய உபதேசம். | (5) |
| | |
182. | 'நெடுங்காலம் துன்பத்தைத் தாங்கும் பொறு மையே முதன்மையான தவம்; நிகரற்ற உயர்ந்தபதவி நிருவாணமே' என்று புத்தர்கள் கூறுகின்றனர். பிறரைத் துன்புறுத்துவோன் முனிவன் அல்லன்; பிறரை இகழ்பவன் துறவி அல்லன் | (6) |