189. | துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்கநிவாரண மார்க்கமாகிய அஷ்டாங்க மார்க்கம்1. | (13) |
| | |
190. | இதுவே பாதுகாப்பான புகலிடம்; இதுவே தலைசிறந்த சரணம். இந்த அடைக்கலத்தை அடைந்த பிறகு, மனிதன் எல்லா வேதனைகளிலிருந்தும் விடுபடுகிறான். | (14) |
| | |
191. | மக்களிலே திலகமான உத்தம புருடர் (புத்தர்)தோன்றுதல் துர்லபம். அவர் கண்ட இடங்களில் பிறப்பவர் அல்லர். அத்தகைய பரம ஞானி எங்கே பிறந்தாலும் அந்தக் குலம் விளக்கமடைகிறது. | (15) |
| | |
192. | புத்தர்களின் தோற்றம் நன்மையளிக்கும்; அவர்களின் தரும உபதேசம் நன்மையளிக்கும்;பௌத்த சங்கத்தில் சேர்தல் நன்மையளிக்கும்;சங்கத்தில் சேர்ந்தவர்களின் தவமும் நன்மையளிக்கும். | (16) |
| | |
193. | தீமைகளையெல்லாம் வென்று, துக்க வெள்ளத்தைத் தாண்டிக் கரையேறிய வணங்கத்தக்க புத்தரையோ, அவர் அடியார்களையோ வணங்குவோன். | (17) |
| | |
194. | நிருவாண நிலைபெற்று, எதற்கும் அஞ்சாது(காற்றைப்போல்) சஞ்சரிக்கும் முத்தர்களை வணங்குவோன்-அடையும் புண்ணியத்தை எவரும் அளவிட முடியாது. | (18) |