பக்கம் எண் :

இயல் பதினைந்து  
  
 களிப்பு

195.

பகை கொள்ளும் மனிதரிடையே பகையில்லாது நாம் இன்பமாக வாழ்கிறோம்; பகைக்கும் மனிதரிடையே நாம் பகையின்றித் திரிகிறோம்.

(1)
 
  
196.

துயர்களால் வருந்துவோர் நடுவே துயரின்றி நாம் இன்பமாக வாழ்கிறோம்; துயரப்படுவோர் நடுவே நாம் துயரின்றித் திரிகிறோம்.

(2)
 
  
197.

கவலையால் நலிந்தவரிடையே நாம் கவலையின்றி இன்பமாய் வாழ்கிறோம்; கவலைப்படுவோர் நடுவே நாம் கவலையின்றித் திரிகிறோம்.

(3)
 
  
198.

எமது என்று எதுவுமில்லாத நாம் இன்பமாக வாழ்கிறோம்; தேசு மிகுந்த தேவர்களைப் போல் நாம்இன்பத்தைப் பருகிக்கொண்டே வாழ்வோம்.

(4)
 
  
199.

வெற்றி வெறுப்பை வளர்க்கும்; தோல்வியுற்றார் துக்கத்தில் வாழ்பவர். வெற்றியும் தோல்வியும் விரும்பாதவன் சுகமும் சாந்தியும் பெறுகிறான்.

(5)
 
  
200.

ஆசைகளுக்கு நிகரான அனல் வேறில்லை;துவேஷத்திற்கு நிகரான நோய் வேறில்லை;உடலோடு வாழ்வதற்கு நிகரான துயர் வேறில்லை;சாந்திக்கு மேலான சந்தோஷமும் வேறில்லை.

(6)
 
  
201.

பேராசையே பரம ரோகம்;
ஐம்புல ஆசைகள் பரமரோகம்;
இதை உண்மையாக உணர்ந்தவனுக்கு
நிருவாணமே பரம சுகம்.

(7)