195. | பகை கொள்ளும் மனிதரிடையே பகையில்லாது நாம் இன்பமாக வாழ்கிறோம்; பகைக்கும் மனிதரிடையே நாம் பகையின்றித் திரிகிறோம். | (1) |
| | |
196. | துயர்களால் வருந்துவோர் நடுவே துயரின்றி நாம் இன்பமாக வாழ்கிறோம்; துயரப்படுவோர் நடுவே நாம் துயரின்றித் திரிகிறோம். | (2) |
| | |
197. | கவலையால் நலிந்தவரிடையே நாம் கவலையின்றி இன்பமாய் வாழ்கிறோம்; கவலைப்படுவோர் நடுவே நாம் கவலையின்றித் திரிகிறோம். | (3) |
| | |
198. | எமது என்று எதுவுமில்லாத நாம் இன்பமாக வாழ்கிறோம்; தேசு மிகுந்த தேவர்களைப் போல் நாம்இன்பத்தைப் பருகிக்கொண்டே வாழ்வோம். | (4) |
| | |
199. | வெற்றி வெறுப்பை வளர்க்கும்; தோல்வியுற்றார் துக்கத்தில் வாழ்பவர். வெற்றியும் தோல்வியும் விரும்பாதவன் சுகமும் சாந்தியும் பெறுகிறான். | (5) |
| | |
200. | ஆசைகளுக்கு நிகரான அனல் வேறில்லை;துவேஷத்திற்கு நிகரான நோய் வேறில்லை;உடலோடு வாழ்வதற்கு நிகரான துயர் வேறில்லை;சாந்திக்கு மேலான சந்தோஷமும் வேறில்லை. | (6) |
| | |
201. | பேராசையே பரம ரோகம்; ஐம்புல ஆசைகள் பரமரோகம்; இதை உண்மையாக உணர்ந்தவனுக்கு நிருவாணமே பரம சுகம். | (7) |