202. | ஆரோக்யகே பரம லாபம்; திருப்தியே பரமதனம்; விசுவாசமே பரம பந்து; நிருவாணமே பரம சுகம். | (8) | | | | 203. | ஏகாந்தத்தின் இன்பத்தையும், அமைதியின் இன்பத்தையும் நுகர்ந்த பிறகு, ஒருவன் தர்மத்தின் இன்பத்தைப் பருகும்போது, பயமும் பாவமும் விலகுகின்றன. | (9) | | | | 204. | நல்லாரைக் காண்பது நன்று; அவரோடு இணங்கியிருப்பது எப்போதும் இன்பம். மூடர்களைப் பாராமலேயிருப்பவன் எப்போதும் இன்பமாயிருப்பான். | (10) | | | | 205. | மூடனுடன் குலாவுவோன் நெடுங்காலம் துன்புறுவான். மூடரோடு குலாவுதல் பகைவருடன் பழகுவதைப் போல, எப்போதும் துக்கந்தான். அறிவாளரின் இணக்கம் சுற்றத்தாரோடு பழகுவதைப் போல் இன்பமே பயக்கும். | (11) | | | | 206. | ஆதலால் நட்சத்திர மண்டலத்தின் வழியைச் சந்திரன் பின்பற்றுவது போல, ஞானியாயும்,பேரறிவாளனாயும், கல்விமானாயும், பொறுமையுடையோனாயும், கடமை உணர்ந்தோனாயும்,மேலோனாயும் உள்ள மகானையே ஒருவன் பின்பற்ற வேண்டும். | (12) |
|
|
|