207. | தியானத்தில் நிலைபெற்று நிற்காமல், உலக பாசங்களில் ஆழ்ந்து, தன் நன்மையையும் கைவிட்டு,இன்பத் தோட்டத்திலே இருப்பவன், தியானத்தில் ஆழ்ந்து முயற்சியோடு இருக்கும் யோகியைக் கண்டு பொறாமைப்படுவான். | (1) | | | | 208. | இன்பமயமானதையோ துன்பமானதையோ எவனும் பற்றிக் கொண்டிருக்கவேண்டாம். இன்பமானதைக் காணாமையும் துக்கம், துன்பமானதைக் காண்பதும் துக்கமே. | (2) | | | | 209. | ஆதலால், எதிலும் ஆசை வேண்டாம். ஆசைப்பட்ட பொருளை இழத்தல் துன்பம். ஆசையும்,வெறுப்பும் அற்றவனுக்கு விலங்குகள் இல்லை. | (3) | | | | 210. | ஆசைப்பட்டதிலிருந்து சோகம் தோன்றுகிறது; ஆசைப்பட்டதிலிருந்து அச்சம் தோன்றுகிறது; ஆசையற்றவனுக்குச் சோகமில்லை;- பயம்தான் ஏது? | (4) | | | | 211. | பிரோமையிலிருந்து சோகம் தோன்றுகிறது; பிரேமையிலிருந்து அச்சம் தோன்றுகிறது; பிரேமையற்றவனுக்குச் சோகமில்லை;- பயம்தான் ஏது? | (5) |
|
|
|