212. | போகத்திலிருந்து சோகம் தோன்றுகிறது; போகத்திலிருந்து அச்சம் தோன்றுகிறது; போகத்தை விட்டவனுக்குச் சோகமில்லை;- பயம்தான் ஏது? | (6) |
| | |
213. | காமத்திலிருந்து சோகம் தோன்றுகிறது; காமத்திலிருந்து அச்சம் தோன்றுகிறது; காமத்தைக் கடந்தவனுக்குச் சோகமில்லை;- பயம்தான் ஏது? | (7) |
| | |
214. | பேராசையிலிருந்து சோகம் தோன்றுகிறது; பேராசையிலிருந்து பயம் தோன்றுகிறது; பேராசையற்றவனுக்குச் சோகமில்லை; பயம்தான் ஏது? | (8) |
| | |
215. | சீலங்கள் நிறைந்து மெய்யறிவு பெற்றவனை,அறத்தில் நிலைபெற்றவனை, வாய்மையாளனை,தன் கருமத்திலேயே நாட்டமுள்ளவனை உலகம் அன்போடு அரவணைத்துக் கொள்கிறது. | (9) |
| | |
216. | வர்ணனைக்கு எட்டாத நிருவாணப் பேற்றில் நாட்டங்கொண்டவன், உள்ளத்தில் நிறைவுகொண்டவன், காமங்களைக் கடந்த மனமுள்ளவன்,-அவனே ஓடும் ஆற்றை எடுத்துச் செல்வோன்1 என்று கூறப்படுவான். | (10) |
| | |
217. | தூரதேசத்தில் நெடுங்காலம் சென்றிருந்தவன் சேமமாகத் திரும்பி வருகையில் சுற்றத்தாரும்,நண்பர்களும்,அன்பர்களும் அவனைக் களிப்போடு வரவேற்று உபசரி்ப்பார்கள். | (11) |