பக்கம் எண் :

இன்பம் 53

212.

போகத்திலிருந்து சோகம் தோன்றுகிறது;
போகத்திலிருந்து அச்சம் தோன்றுகிறது;
போகத்தை விட்டவனுக்குச் சோகமில்லை;-
பயம்தான் ஏது?

(6)
 
  
213.

காமத்திலிருந்து சோகம் தோன்றுகிறது;
காமத்திலிருந்து அச்சம் தோன்றுகிறது;
காமத்தைக் கடந்தவனுக்குச் சோகமில்லை;-
பயம்தான் ஏது?

(7)
 
  
214.

பேராசையிலிருந்து சோகம் தோன்றுகிறது;
பேராசையிலிருந்து பயம் தோன்றுகிறது;
பேராசையற்றவனுக்குச் சோகமில்லை;
பயம்தான் ஏது?

(8)
 
  
215.

சீலங்கள் நிறைந்து மெய்யறிவு பெற்றவனை,அறத்தில் நிலைபெற்றவனை, வாய்மையாளனை,தன் கருமத்திலேயே நாட்டமுள்ளவனை உலகம் அன்போடு அரவணைத்துக் கொள்கிறது.

(9)
 
  
216.

வர்ணனைக்கு எட்டாத நிருவாணப் பேற்றில் நாட்டங்கொண்டவன், உள்ளத்தில் நிறைவுகொண்டவன், காமங்களைக் கடந்த மனமுள்ளவன்,-அவனே ஓடும் ஆற்றை எடுத்துச் செல்வோன்1 என்று கூறப்படுவான்.

(10)
 
  
217.

தூரதேசத்தில் நெடுங்காலம் சென்றிருந்தவன் சேமமாகத் திரும்பி வருகையில் சுற்றத்தாரும்,நண்பர்களும்,அன்பர்களும் அவனைக் களிப்போடு வரவேற்று உபசரி்ப்பார்கள்.

(11)

 


1ஓடும் ஆற்றை எதிர்த்துச் செல்வோன்-உத்தமஸோதோ' அல்லது 'ஊர்த்வம் ஸ்ரோத' என்று பௌத்த நூல்களில் கூறப்படுவோன். உலகம் போகிற போக்கில் செல்லாமல் இவன் எதிர்த்துச் செல்பவன்.