219. | கோபத்தை விடு, செருக்கைக் கைவிடு, உலகப்பற்றுக்கள் அனைத்தையும் ஒழி. நாம-உருவங்களில் தொடர்பற்றவனுக்கு, எதையும் 'எனது' என்று கொள்ளாதவனுக்குத் துக்கங்கள் ஏற்படுவதில்லை. | (1) |
| | |
220. | வழிதவறிச் செல்லும் இரதம் போலப் பொங்கிவரும் கோபத்தை அடக்கியாள்பவனையே நான்சரியான சாரதி என்று சொல்வேன்; மற்றையோர் கடிவாளக் கயிற்றைக் (கையில்) வைத்திருப்பவர்களே. | (2) |
| | |
221. | வெகுளியை விநயத்தால் வெல்லவேண்டும்; நீமையை நன்மையால் வெல்லவேண்டும்; கருமியை ஈகையால் வெல்லவேண்டும்; பொய்யனை மெய்யால் வெல்லவேண்டும். | (3) |
| | |
222. | சத்தியமே பேசு, வெகுளிக்குப் பணியவேண்டாம்,யாசிப்பவர்க்கு இயன்றதைக் கொடு-இந்த மூன்றுவழிகளாலும் ஒருவன் தேவர்களுடைய சந்நிதியைநிச்சயம் அடையலாம். | (4) |
| | |
223. | முனிவர்கள் அஹிம்சையோடு இருப்பவர்கள்,எப்போதும் உடலைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள். அவர்கள் நிலையான இடத்தை அடைவார்கள்; அடைந்த பின்பு அவர்கள் வருந்துவதில்லை. | (5) |