பக்கம் எண் :

இயல் பதினேழு  
  
 கோபம்

219.

கோபத்தை விடு, செருக்கைக் கைவிடு, உலகப்பற்றுக்கள் அனைத்தையும் ஒழி. நாம-உருவங்களில் தொடர்பற்றவனுக்கு, எதையும் 'எனது' என்று கொள்ளாதவனுக்குத் துக்கங்கள் ஏற்படுவதில்லை.

(1)
 
  
220.

வழிதவறிச் செல்லும் இரதம் போலப் பொங்கிவரும் கோபத்தை அடக்கியாள்பவனையே நான்சரியான சாரதி என்று சொல்வேன்; மற்றையோர் கடிவாளக் கயிற்றைக் (கையில்) வைத்திருப்பவர்களே.

(2)
 
  
221.

வெகுளியை விநயத்தால் வெல்லவேண்டும்;
நீமையை நன்மையால் வெல்லவேண்டும்;
கருமியை ஈகையால் வெல்லவேண்டும்;
பொய்யனை மெய்யால் வெல்லவேண்டும்.

(3)
 
  
222.

சத்தியமே பேசு, வெகுளிக்குப் பணியவேண்டாம்,யாசிப்பவர்க்கு இயன்றதைக் கொடு-இந்த மூன்றுவழிகளாலும் ஒருவன் தேவர்களுடைய சந்நிதியைநிச்சயம் அடையலாம்.

(4)
 
  
223.

முனிவர்கள் அஹிம்சையோடு இருப்பவர்கள்,எப்போதும் உடலைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள். அவர்கள் நிலையான இடத்தை அடைவார்கள்; அடைந்த பின்பு அவர்கள் வருந்துவதில்லை.

(5)