271. | மார்க்கங்களில் அஷ்டாங்க மார்க்கமே1 சிறந்தது.வாய்மைகளில் நான்கு வாய்மைகளே2 சிறந்தவை;சீலங்களில் வைராக்கியமே3 சிறந்தது; மக்களில் ஞானக்கண்4 உடையவனே சிறந்தவன். | (1) | | | | 272. | இதுதான் மார்க்கம், அறிவைப் புனிதமாக்க வேறு வழியில்லை. இதையே பின்பற்றுக; மாரனைவெல்ல இதுவே ஏற்றது. | (2) | | | | 273. | இந்த மார்க்கத்தில் சென்றால், உன் துக்கங்கள் தொலையும். சதையில் தைத்துள்ள முட்களை(துன்பங்களை) நீக்கும் வழியை அறிந்ததும், நான் இந்த மார்க்கத்தை உபதேசிக்க நேர்ந்தது. | (3) | | | | 274. | நீயே தான் முயற்சி செய்ய வேண்டும். ததாகதர் உபதேசம் மட்டுமே செய்வர். இந்த மார்க்கத்தில் இறங்கி, தியானத்தில் ஆழ்ந்தவர்களுக்கு மாரனுடைய பந்தங்கள்5 விலகும் | (4) |
1 | அஷ்டங்க மார்க்கம்-நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நல்லூக்கம், நற்கடைப்படி, நல்லமைதி என்ற எட்டுப்பிரிவுகளுள்ள மார்க்கம். இவை பற்றிய விளக்கத்தை அனுபந்தம் ஒன்றில் காணலாம். | 2 | நான்கு வாய்மைகள்-துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்ற உண்மைகள். | 3 | வைராக்கியம்-வெறுப்பு. ஆசைகளை வெறுத்துஒதுக்கல். | 4 | ஞானக்கண்-உண்மையை ஊடுருவிப் பார்க்கும் சக்தி. | 5 | மாரனுடைய பந்தங்கள்-பாவம், மரணம் முதலியவை. |
|
|
|