278. | எவன் உரிய வேளையில் விழித்து எழாமலுள்ளானோ, எவன் பலமுள்ள வாலிபனாயிருந்தும்,சோம்பரில் ஆழ்ந்து கருத்திலும் சிந்தனையிலும் உறுதியற்றுள்ளானோ, அந்த மந்த புத்தியுள்ள சோம்பேறி ஞான மார்க்கத்தை அடையமுடியாது. | (8) | | | | 279. | ஒருவன் தன் நாவைக் காத்து, மனத்தை அடக்கி உடலால் தீமை எதையும் செய்யாது இருப்பானாக.செயல்புரிவதற்கு ஏற்பட்ட இந்த மூன்று வழிகளையும் பரிசுத்தமாக வைத்திருப்பவன் பெரியோர் அருளிய நன்னெறியை அடைவான். | (9) | | | | 280. | தியானத்திலிருந்து ஞானம் உதயமாகிறது; தியான மில்லாவிடில் ஞானம் குறைகிறது; ஆக்கமும்,கேடும் வரக்கூடிய இந்த இரு வழிகளையும் அறிந்து, அறிவு பெருகும் வழியை மனிதன் மேற்கொள்வானாக. | (10) | | | | 281. | ஓ பிக்குகளே! ஒரு மரத்தை மட்டும் வெட்டினால் போதாது, ஆசைக் காட்டையே அரிந்து தள்ளுங்கள்! ஆசைக் காட்டிலிருந்தே அபாயம் வருகிறது. காட்டையும், புதர்களையும் வெட்டி வீழ்த்திய பிறகு நீங்கள் விடுதலை பெறுவீர்கள். | (11) | | | | 282. | ஆடவன் பெண்களிடம் கொள்ளும் காம ஆசை எதுவரை அழிக்கப்படாமல் அணுவளவேனும் இருக்கிறதோ, அதுவரை, பால்குடி மறவாத பசுங்கன்று தன் தாயிடம் ஒட்டிக் கொள்வது போல்,அவன் மனம் (வாழ்வைப்) பற்றிக் கொண்டேயிருக்கும். | (12) |
|
|
|