283. | சரத்காலத்தில் தோன்றும் குமுத புஷ்பத்தைக் கையால் பறித்தெடுப்பது போல், ஆன்மநேயத்தை1 அறுத்தெறிக. புத்தர் போதித்த நிருவாண முக்திக்குரிய சாந்தி மார்க்கத்தைப் போற்றி நடக்கவும். | (13) |
| | |
284. | மூடனாயிருப்பவன், 'கார் காலத்தில் இங்கே வசிப்பேன்!' என்றும், 'குளிர் காலத்திலும், கோடை காலத்திலும அங்கே வசிப்பேன்!' என்றும் கருதுகிறான்; (இடையிலே வரக்கூடிய மரணம் என்ற)இடையூற்றைப் பற்றி அவன் எண்ணுவதில்லை. | (14) |
| | |
285. | (மக்கள்) உறங்கிக் கொண்டிருக்கையில் பெருவெள்ளம் வந்து கிராமத்தையே அடித்துக்கொண்டு போய்விடுகிறது; அதுபோல், தன்மக்கள் பசுக்கள் முதலிய செல்வங்களில் மகிழ்ந்து மயக்கத்திலுள்ள மனிதனை எமன் வந்து அடித்துக் கொண்டு போகிறான். | (15) |
| | |
286. | எமனால் பிடிக்கப்பட்ட ஒருவனை அவன் பெற்றமக்கள் காக்க முடியாது; தந்தையும் தமர்களும் காக்க முடியாது; உற்றாரை நம்பியும் பயனில்லை. | (16) |
| | |
287. | இதன் உண்மையை உணர்ந்து, நற்குணமுள்ள ஞானி நிருவாண முக்திக்குரிய வழியிலேயுள்ள தடைகளை உடனே நீக்கிக் கொள்ளட்டும். | (17) |