1 | உண்மையான பிராமணன் இத்தகைய பாவம் எதையும் செய்ய மாட்டான் என்பது கருத்து. இவ்வாறே அடுத்த சூத்திரத்தையும் கொள்ள வேண்டும். புத்தபகவர், தம் காலத்தில் வழங்கிய கதைகள், புராணங்கள். சாஸ்திரங்களிலிருந்து சில சிறப்புப் பெயர்களையும், சொற்களையும், கதைகளையும் எடுத்துக் கையாள்வது உண்டு. ஆனால், அவருடைய கருத்துக்களில் வேற்றுமையிருக்கும். பிரம்மா, தேவர்கள், சுவர்க்கம், நரகம் முதலிய சொற்களை அவர் உபயோகித்திருக்கிறார். சாதாரண மக்களுக்குத் தம் கருத்துக்களைஎளிதாகக் கூறுவதற்காகவே அவர் இவைகளைக் கையாண்டிருக்கிறார். உலகங்கள் யாவையும் படைத்தஒரு பிரம்மாவைப் பற்றியோ, தேவர்களைப் பற்றியோஅவர் நம்புவதுமில்லை; ஆராய்வதுமில்லை. இவை போன்ற ஒரு சொல்லே 'பிராமணர்' என்பதும், சில இடங்களில் புத்தர் பிக்குகளைப் பிராமணர் என்று கூறுவதுண்டு. பிராமண குலத்தில் பிறந்தவரை அவர் குறிப்பிடவில்லை. உண்மையான பிராமணர் எவர்கள் என்று அவர் விளக்கி யுரைத்திருப்பதை இந்நூலிலே26-வது இயலில் காணலாம். அவர் கருத்துப்படிபிராமணராயிருப்போர் ஈ, எறும்புக்குக் கூட ஹிம்சை செய்யமாட்டார். இந்த 5, 6- சூத்திரங்களுக்குத் 'தாய்' என்பது அவா,தந்தை என்பது 'அகங்காரம்' என்ற முறையில் விசேடஉரைகள் கூறுவதுண்டு. இப்படியெல்லாம் மறைபொருளாகக் கூறித் திகைக்க வைக்கும் முறை புத்தரிடம் அரிது. பழைய ஹிந்துமத நூல்கள் சிலவற்றில், பிராமணன் கொலை செய்தால் பாவமில்லை என்று கூறியிருப்பதற்கும், புத்தர் கூற்றுக்கும் துளியும் சம்பந்தமிருக்க முடியாது. பௌத்த தருமத்தின்படி ஒவ்வொருவனும் தன் சிந்தனைக்கும், செயலுக்கும் தானே பொறுப்புள்ளவன். பாவ மன்னிப்பு என்பதே கிடையாது. ஒவ்வொருவனுடைய பாவத்தையும் அவனே அனுபவித்துத் தீரவேண்டும். |