பக்கம் எண் :

70 தம்மபதம்

293.

உண்மையான பிராமணன் ஓருவன் தன் தாயையும், தந்தையையும், குருமார்களாகிய க்ஷத்திரியமன்னர் இருவரையும், ஐந்தாவதாக ஓரு வேதியனையும் கொன்றிருந்த போதிலும், அவன் பாவமற்றவனாவான்.

(6)
 
  
294.

கௌதமருடைய1 சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பாயிருக்கிறார்கள்; இரவும் பகலும் எப்போதும் அவர்களுடைய சிந்தனையெல்லாம் புத்தரைப் பற்றியவையே.

(7)
 
  
295.

கௌதமருடைய சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பாயிருக்கிறார்கள்; இரவும், பகலும் எப்போதும் அவர்களுடைய சிந்தனையெல்லாம் பௌத்த தருமத்தைப் பற்றியவையே.

(8)

 


1கௌதமர் - புத்தர்.