322. | தனபாலகன் என்ற பெயருள்ள யானையானது மத நீர் பொழியும் காலத்தில் அடக்கமுடியாத தாகிறது.கட்டிவைத்தால், அது ஒரு கவளம்(உணவு) கூட உண்ணாது.அதன் நினைவெல்லாம் யானைகள் வசிக்கும் வனத்திலேயே இருக்கும். | (5) | | | | 323. | மலத்தைத் தின்று வரும் பெரும் பன்றியைப்போல்,ஒருவன் உடல் கொழுத்துப் பெருந்தீனியில்பற்றுள்ளவனாகி, நீங்காத சோம்பலிலும், நித்திரை யிலும் ஆழ்ந்து, படுக்கையிலே புரண்டுகொண்டிருந்தால், அந்த அறிவிலி திரும்பத் திரும்பப் பிறவியெடுக்க நேருகிறது. | (6) | | | | 324. | முற்காலத்தில் எனது மனம் தன் விருப்பம் போல்சுற்றித் திரிந்து கொண்டிருந்தது.யானை மதம்கொள்ளும்போது பாகன் அங்குசத்தால் அதனை அடக்குவதுபோல, இப்போது என் மனத்தைநான் அடக்கியாள்வேன். | (7) | | | | 325. | கருத்தில்லாமல் இருக்கவேண்டாம்; மனத்தில் சிந்தனைகளை அடக்கிக் காக்கவும், சேற்றில் விழுந்த யானையைக் கரையேற்றுவது போலத்தீய வழியிலிருந்து உன்னை மீட்டுக் கொள்க. | (8) | | | | 326. | அறிவாளியாயும், உன்னோடு ஒத்துப் பழகக்கூடியவனாயும், அடக்கத்தோடு நல்லொழுக்க முடையவனாயும் ஒரு தோழன் கிடைப்பானாகில்,எல்லா இடையூறுகளையும் கடந்து, அவனுடன்கருத்தோடும், மகிழ்ச்சியோடும் நட்புக் கொள்வாயாக. | (9) |
|
|
|