பக்கம் எண் :

யானை 77

327.

அறிவாளியாயும், உன்னோடு ஒத்துப் பழகக்கூடியவனாயும், அடக்கத்தோடு நல்லொழுக்க முடையவனாயும் ஒரு தோழன் கிடைக்கவில்லை யானால், தன்னை வென்ற பகையரசனிடம்நாட்டைவிட்டு வெளியேறும் மன்னனைப் போலவும், யானைகளின் வனத்திலே யானை (சுயேச்சை யாய்த்) திரிவது போலவும், நீ தனியாகவேவாழ்வாயாக.

(10)
 
  
328.

மூடனுடைய நட்பைப் பார்க்கிலும் ஒருவன்தனியே வசிப்பது நலம். ஆசைகளைக் குறைத்துக் கொண்டு, யானைகளின் காட்டில் யானை(சுயேச்சையாகத்) திரிவது போல், அவன் தனியேசெல்வானாக; பாவகருமம் எதையும் செய்யாதிருப்பானாக.

(11)
 
  
329.

அவசியம் ஏற்படும்போது நண்பர்கள் வாய்ப்பது இனிமையாம்; ஒரு தலையாக இல்லாத திருப்தி இனிமையாம்; மரணகாலத்தில் (முன் செய்த)புண்ணியம் இனிமையாம்; எல்லாத் துக்கங்களையும் விட்டொழித்தல் இனிமையாம்.

(12)
 
  
330.

இந்த உலகில் தாயைப் போற்றுதல் இனிது;தந்தையைப் போற்றுதல் இனிது; துறவியைப் போற்றுதல் இனிது; இனிதே மெய்ஞ்ஞானியைப்போற்றுதல்.

(13)
 
  
331.

வயோதிகம்வரை நல்லொழுக்கம் நிலைத்திருத்தல்இனிது; (அறத்தில்)உறுதியான நம்பிக்கைஇனிது; ஞானத்தை அடைதல் இனிது; இனிதேபாவங்களை விலக்கல்.

(14)