344. | இந்தப் பாசம் (கழற்றவோ, அறுக்கவோ) எளிதான முறையில் தளர்ச்சியாகவும், உறுதியற்றும் இருந்தாலும் இதை அவிழ்ப்பதோ அறுப்பதோகஷ்டம். இதுவே பலமான தளை என்று அறிஞர்கூறுவர். ஆசைகளற்றுப் புலன்களின் இன்பங்களைக் கைவிட்டு உலகைத் துறப்பவர்கள் இதை யும் அறுத்து விடுகிறார்கள். | (13) | | | | 345. | சிலந்தி தானே அமைத்த வலைக்குள் சுற்றுவதுபோல, ஆசைகளில் அழுந்திய மக்கள் வெள்ளத்தின் போக்கில் மிதந்து செல்கின்றனர். அறிவுபெற்றவர்கள்,(அவா என்னும்) இந்தத் தளையைஅறுத்துக் கொண்டதும் உலகைத் துறந்து,கவலைகளில்லாமல், துக்கங்களை யெல்லாம்விட்டுக் கடந்து போகின்றனர். | (14) | | | | 346. | முன்னால் இருப்பதையும், பின்னால் இருப்பதையும், நடுவில் இருப்பதையும் கடந்து பிறவியின்மறுகரையை அடைவாயாக. மனம் முழுவதும் விடுதலையடைந்து விட்டால், நீ மறுபடிபிறப்பும் மூப்பும் பெறமாட்டாய். | (15) | | | | 347. | கலங்கிய சிந்தனைகளும், உணர்ச்சி வெறிகளும்,இன்பத்தில் தேட்டமும் உள்ள மனிதனுக்கு அவா வளர்ந்து கொண்டேயிருக்கும்; அவன் தன்கட்டைப் பலப்படுத்திக் கொள்கிறான். | (16) | | | | 348. | சிந்தனைகளைச் சாந்தப் படுத்துவதில் நாட்ட முள்ளவன், எப்பொழுதும் விழிப்புள்ளவன்,(உலகில்) இன்பமில்லை என்பதில் கருத்தைச்செலுத்துபவன், மாரனின் மரணத்தளையிலிருந்துவிடுபடுவான்-அதை முறித்தெறிவான். | (17) |
|
|
|