பக்கம் எண் :

82 தம்மபதம்

349.

எவன் தியானத்தின் முடிவான உபசாந்தியை அடைந்துள்ளானோ, எவன் பயத்தையும், பாசத் தையும், பாவத்தையும், ஒழித்துவிட்டானோ, அவன் பிறவியாகிய முட்களைக் களைந்தெறிந் தவன், (பல ஸ்கந்தகங்களால் அமைந்த) இந்தச்சடலமே அவன் (எடுக்க நேர்ந்த) கடைசி உடம்பாம்.

(18)
 
  
350.

எவன் அவாவை அழித்து, எதையும் தேடி வைத்துக் கொள்ளாமல் இருக்கிறானோ, எவன்சொற்களையும், அவற்றின் பொருள்களையும் உணரும் சக்தியுள்ளானோ, எவன் எழுத்துக்களின் சேர்க்கையை (முன்னும் பின்னும் இருக்கவேண்டிய முறையை)த் தெரிந்துள்ளானோ,அவனே மகா ஞானி, அவனே மகான்.இந்தச்சடலமே அவன் (எடுக்க நேர்ந்த) கடைசி உடம்பாம்.

(19)
 
  
351.

'நான் யாவற்றையும் பென்றவன், நான் யாவற்றையும் அறிந்தவன், வாழ்வின் நிலைகள்யாவற்றினும் நான் ஒட்டுப் பற்றில்லாதவன். எல்லாவற்றையும் நான் துறந்தாயிற்று, அவாவை அழித்ததால் நான் முக்தி அடைந்தவன்.எல்லாவற்றையும் நானே கற்றுக் கொண்டபின், எவரை என் குருவென்று காட்டுவேன்?'1.

(20)

 


1கௌதம சித்தார்த்தர் போதியடைந்து புத்தரானதும் காசிக்கு அருகே சாரநாத்திலிருந்த தம் தோழர் ஐவருக்கு உபதேசிப்பதற்காகச் செல்லும்போது ஜைன சமயத்தைச் சேர்ந்த உபாகர் என்ற பிராமணர் அவரைச் சந்தித்தார். புத்தரின் முகப்பொலிவும், கண்களின் ஒளியும்; புனிதப் பண்பையும், பூர்ண ஞானத்தையும் தெளிவாக எடுத்துக் காட்டியதைக்கண்டு உபாகர், அவருடைய குரு யார் என்று வினவினார். அதற்குப் பதிலாகப் பகவர், ' எனக்கு நானே குரு!' என்று அறிவுறுத்த இதைக் கூறினார்.