352. | சகல தானங்களையும் தரும தானமே1 வெல்கிறது; சகல இனிமைகளையும் தரும இனிமை வெல்கிறது; சகல இன்பங்களையும் தரும அநுபவம் வெல்கிறது; சகல துன்பங்களையும் அவாவின்மை வெல்கிறது. | (21) |
| | |
353. | போக வாழ்க்கை மூடனை அழித்துவிடுகின்றது;ஆனால் எதிர்க்கரையை நாடுவோரை அழிப்ப தில்லை, மூடன் போக ஆசையால் பிறரால் அழிக் கப்படுவதுபோல்2 தானே தன்னை அழித்துக்கொள்கிறான். | (22) |
| | |
354. | வயல்களுக்குத் தீமை களைகள், மனிதவர்க்கத் திற்குத் தீமை ஆசை; ஆதலால் ஆசையற்றவர் களுக்குச் செய்த உதவி பெரும்பயனை அளிக்கும். | (23) |
| | |
355. | வயல்களுக்குத் தீமை களைகள், மனிதவர்க்கத் திற்குத் தீமை துவேஷம்; ஆதலால் துவேஷ மற்றவர்களுக்குச் செய்த உதவி பெரும் பயனை அளிக்கும். | (24) |
| | |
356. | வயல்களுக்குத் தீமை களைகள், மனிதவர்க்கத் திற்குத் தீமை மயக்கம்; ஆதலால் மயக்கம்நீங்கியவர்களுக்குச் செய்த உதவி பெரும் பயனை அளிக்கும். | (25) |
| | |
357. | வயல்களுக்குத் தீமை களைகள், மனிதவர்க்கத் திற்குத் தீமை இச்சை; ஆதலால் இச்சையற்றவர் களுக்குச் செய்த உதவி பெரும் பயனை அளிக்கும். | (26) |