பக்கம் எண் :

அவா 83

352.

சகல தானங்களையும் தரும தானமே1 வெல்கிறது; சகல இனிமைகளையும் தரும இனிமை வெல்கிறது; சகல இன்பங்களையும் தரும அநுபவம் வெல்கிறது; சகல துன்பங்களையும் அவாவின்மை வெல்கிறது.

(21)
 
  
353.

போக வாழ்க்கை மூடனை அழித்துவிடுகின்றது;ஆனால் எதிர்க்கரையை நாடுவோரை அழிப்ப தில்லை, மூடன் போக ஆசையால் பிறரால் அழிக் கப்படுவதுபோல்2 தானே தன்னை அழித்துக்கொள்கிறான்.

(22)
 
  
354.

வயல்களுக்குத் தீமை களைகள், மனிதவர்க்கத் திற்குத் தீமை ஆசை; ஆதலால் ஆசையற்றவர் களுக்குச் செய்த உதவி பெரும்பயனை அளிக்கும்.

(23)
 
  
355.

வயல்களுக்குத் தீமை களைகள், மனிதவர்க்கத் திற்குத் தீமை துவேஷம்; ஆதலால் துவேஷ மற்றவர்களுக்குச் செய்த உதவி பெரும் பயனை அளிக்கும்.

(24)
 
  
356.

வயல்களுக்குத் தீமை களைகள், மனிதவர்க்கத் திற்குத் தீமை மயக்கம்; ஆதலால் மயக்கம்நீங்கியவர்களுக்குச் செய்த உதவி பெரும் பயனை அளிக்கும்.

(25)
 
  
357.

வயல்களுக்குத் தீமை களைகள், மனிதவர்க்கத் திற்குத் தீமை இச்சை; ஆதலால் இச்சையற்றவர் களுக்குச் செய்த உதவி பெரும் பயனை அளிக்கும்.

(26)

 


1தருமதானம்-தரும உபதேசம்.
2மூடனைப் பிறர் அழிக்கவேண்டியதில்லை. அந்த வேலையைத் தானே பார்த்துக் கொள்கிறான். 'மற்றவர்களை அவன் அழிப்பது போல' என்றும், 'மற்றவர்களை அவன் அழிப்பதாக எண்ணிக்கொண்டு' என்றும், ' பிறன் ஒருவனைக் கொல்வது போல்' என்றும் இந்த இடத்திற்குப் பொருள் கூறுவர்.