பக்கம் எண் :

பிக்கு 87

377.

ஓ பிக்கு! உன்னை நீயே தூண்டிக்கொள்; உன்னை நீயே சோதனை செய்துகொள்;உன்னை நீயே தற்காப்புச் செய்து கவனமா யிருந்தால், நீ இன்புற்று வாழ்வாய்.

(20)
 
  
378.

ஒருவன் தனக்குத்தானே தலைவன், தனக்குத்தானே புகலிடம்.ஆதலால் வணிகன் உயர்ந்தகுதிரையை அடக்கிப் பழகுவதுபோல உன்னைநீயே அடக்கிப் பழகவும்.

(21)
 
  
379.

மன மகிழ்ச்சியோடும், அமைதியோடும், புத்ததருமத்தில் நம்பிக்கை கொண்ட பிக்கு (துயர மான) வாழ்வை நீத்து இன்பமயமான சாந்திநிலையை அடைவது திண்ணம்.

(22)
 
  
380.

இளவயதாயிருப்பினும், புத்த தருமத்தில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடும் பிக்கு, மேகத் திரையிலிருந்து விடுபட்ட வெண்மதி போல, இவ்வுலகில் ஒளியைப் பரப்புகிறான்.

(23)