381. | ஓ பிராமணா! வீரத்துடன் எதிர்த்து வெள்ளத்தைத்தடுத்து நில்; ஆசைகளை விரட்டிவிடு. படைக்கப்பட்ட எல்லாம் அழிவடையும் என்பதைஉணர்ந்த பிறகு, படைக்கப் பெறாததை நீஅறிவாய். | (1) | | | | 382. | (தன்னடக்கம், ஆன்மஞானம் என்ற) இரண்டுதருமங்களிலும் அக்கரை கண்ட பிராமணனுக்கு அனைத்தையும் அறியும் ஆற்றலுள்ள அவனுக்குப் பந்தங்கள் யாவும் ஒழிகின்றன. | (2) | | | | 383. | எவனுக்கு இக்கரையுமின்றி, அக்கரையுமின்றி1இரண்டுமில்லையோ, எவனுக்கு அச்சமும்,கட்டுக்களும் ஒழிந்தனவோ, அவனையே நான்பிராமணன் என்று கூறுவேன். | (3) | | | | 384. | எவன் தியானத்துடன் உள்ளானோ, ஆசைகளற்றவனோ, நிலையான அமைதியுள்ளவனோ கடமைகளைச் செய்து முடிப்பவனோ, எவன் மாசற்றவனோ, எவன் உத்தமமான ஞானியின்முடிவான நிலையை அடைந்தவனோ, அவனையே நான் பிராமணன் என்று அழைப்பேன். | (4) | | | | 385. | ஆதித்தன் பகலில் ஒளி கொடுக்கிறான். சந்திரன் இரவை ஒளி செய்கிறான்; போர் வீரன் கவசம் அணிந்து பிரகாசிக்கிறான்; பிராமணன் தியானத் தில் பிரகாசிக்கிறான்; புத்தர் இரவும் பகலும் எல்லாப் பொருள்களையும் தம் ஞான ஒளியால்பிரகாசிக்கச் செய்கிறார். | (5) |
1 | இக்கரை-புறத்தேயுள்ள ஆறு பொறிகள். அக்கரை-அகத்தேயுள்ள ஆறு புலன்கள். |
|
|
|