பக்கம் எண் :

பிராமணன் 89

386.

ஒருவர் பாவத்தை ஒழித்ததால் பிராமணன் என் கிறோம்; சாந்தியில் வாழ்வதால் சமணன் என்கிறோம்; மலங்களை வென்றதால் மலமற்றவன்(ப்ரவ்ராஜிதா) என்கிறோம்.

(6)
 
  
387.

பிராமணனை எவரு0ம் தாக்குதல் தகாது; தாக்கப்பட்ட பிராமணன் தாக்கியவன் மீது பாய்தலும் தகாது. பிராமணனைக் கொல்வோன் பழிக்கு ஆளாவான்; அத்தீயோனிடம் கோபத்தைச் செலுத்துவோன் அதிகப் பழிக்கு ஆளாவான்.

(7)
 
  
388.

வாழ்க்கையின் இன்பங்களில் மனம் ஆழ்ந்து விடாதபடி அடக்குதல் பிராமணனுக்குச் சாமானியமான சிறப்பன்று; எங்கெல்லாம் மற்றவர்களுக்கு ஹிம்சைசெய்யும் எண்ணம் அடக்கப்படுகிறதோ,அங்கெல்லாம் துக்கம் தொலைந்து போகிறது.

(8)
 
  
389.

மெய், வாய், மனம் ஆகிய மூன்றிலும் அடக்க முள்ளவனையே நான் பிராமணன் என்று சொல் வேன்.

(9)
 
  
390.

பூர்ண ஞானம் பெற்ற புத்தர் (ஸம்மா ஸம்புத்த)உபதேசித்த தருமத்தை உணர்ந்தவனை, பிராமணன் வேள்வியில் அக்னியை வணங்குவது போல் மக்கள் வணங்க வேண்டும்.

(10)
 
  
391.

ஒருவன் பிராமணனாவது சடைத்தலையால்அன்று; தன் கோத்திரத்தால் அன்று; பிறப்பினாலும் அன்று; எவனிடம் சத்தியமும், தருமமும் நிலைத்துள்ளனவோ, அவனே பாக்கியவான்.அவனே பிராமணன்.

(11)