பக்கம் எண் :

90 தம்மபதம்

392.

மூடனே! சடைத்தலையாலும், மான்தோல் ஆடையாலும் என்ன பயன்? புறத்தை நீ தூய்மை செய்கிறாய்; என் அகமோ தீமைகள் நிறைந்தகாடாக இருக்கிறது.

(12)
 
  
393.

பிறர் கழித்து நீக்கிய வஸ்திரங்களை அணிந்து, உடல் மெலிந்து, நரம்புகள் தெரியும்படி உலர்ந்து, வனத்திலே ஏகாந்தமாகத் தியானம் செய்பவ னையேதான் பிராமணன் என்று சொல்வேன்.

(13)
 
  
394.

தாயைக் கொண்டோ, குலத்தைக் கொண்டோ ஒரு மனிதனை நான் பிராமணன் என்று கூறுவதில்லை. அவன் செல்வனாயிருந்தால்,போவாதி1 என்று அழைக்கப்படுவான்; ஆனால் ஏழையாய்ப் பொருளாசையும் இல்லாமலிருந்தால் அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.

(14)
 
  
395.

சகல பற்றுக்களையும் சேதித்தவன், அச்சமற்றவன், உறவு பந்தங்களிலிருந்து விடுபட்டவன்,(அசத்தியத்திலிருந்து) ஒதுங்கியவன் எவனோ,அவனையே நான் பிராமணன் என்று சொல் வேன்.

(15)
 
  
396.

தன்னைப் பிணித்துள்ள (துவேஷமாகிய) தோலையும், (ஆசையாகிய) வாரையும், (போலிச் சமயக் கொள்கைகளாகிய) சங்கிலியையும், (அஞ்ஞான மாகிய) குட்டையையும் அறுத்துக் கொண்டுபோதியடைந்தவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.

(16)

 


1போவாதி-அகங்காரமுள்ளவன்.