416. | இன்பமானவற்றையும், துன்பமானவற்றையும் கைவிட்டு அமைதி பெற்றவன், (மறு பிறப்புக்குக்காரணமான கர்ம) வித்துக்களை ஒதுக்கியவன்,சகல உலகங்களையும் வென்ற வீரன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். | (36) | | | | 417. | எங்கும் உயிர்கள் அழிவதையும், அவைகளின் தோற்றத்தையும் அறிந்தவன், பற்றற்றவன், நல்வழி நடப்பவன், போதியடைந்தவன் எவனோ,அவனையே நான் பிராமணன் என்று சொல் வேன். | (37) | | | | 418. | எவனுடைய பாதையைத் தேவர்களும், கந்தர்வர்களும், மானிடர்களும் அறியார்களோ, எவன் குறைகள் நீங்கி அருகத் நிலையை அடைந்துவிட்டானோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். | (38) | | | | 419. | எவனுக்கு முன்னாலும், பின்னாலும், இடையிலும் எதுவும் இல்லையோ; எப்பொருளுமின்றி எவ்விதப் பற்று மின்றியிருக்கிறானோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். | (39) | | | | 420. | காளைபோல் வீரமுள்ளவன், பெருந்தன்மை யுள்ளவன், தீரன் ஞான முனிவன், (மரணத்தை) வென்றவன், பாவமற்றவன், கல்வியில் பூர்த்தி பெற்றவன், போதியடைந்தவன்1 எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். | (40) | | | | 421. | தன்னுடைய முந்திய ஜன்மங்களை அறிந்தவன், சுவர்க்கத்தையும், நரகத்தையும் அறிந்தவன், பிறவிகளின் எல்லையை அடைந்தவன், அறிவு நிறைந்த முனிவன், நிறைவேற்ற வேண்டியவை அனைத்தையும் நிறைவேற்றி முடித்தவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். | (41) |
தம்ம பதம் முற்றிற்று
|
|
|