உயிரினையன்றுங்காணீர் இன்றுங்காணீர் உடலினையன்றுங்கண்டீர் இன்றுங்கண்டீர் உயிரினையிழந்த உடலதுதன்னைக் களவுகொண்ட கள்வனைப்போலக் காலுமார்த்துக் கையுமார்த்துக் கூறைகளைந்து கோவணங்கொளுவி ஈமத்தீயை எரியெழமூட்டிப் பொடிபடச்சுட்டுப் புனலிடைமூழ்கிப் போய்த்தமரோடும் புந்தினைந்தழுவது சலமெனப்படுமோ சதுரெனப்படுமோ பார்ப்பனமாந்தர்காள் பகவர்வதுகேண்மின் இறந்தவராயுமை இல்லிடையிருத்திப்
|