பாவனைமந்திரம் பலபடவுரைத்தே உமக்கவர்புத்திரர் ஊட்டினபோது அடுபசியாற்குலைந் தாங்கவர்மீண்டு கையேந்திநிற்பது கண்டதார்புகலீர் அருந்தியவுண்டியால் ஆர்பசிகழிந்தது ஒட்டியர்மிலேச்சர் ஊணர்சிங்களர் இட்டிடைச்சோனகர் யவனர்சீனத்தர் பற்பலநாட்டிலும் பார்ப்பாரிலையால் முற்படைப்பதனில் வேறாகியமுறமைபோல் நால்வகைச்சாதியிந் நாட்டில்நீர்நாட்டினீர் மேல்வகைகீழ்வகை விளங்குவதொழுக்கால் பெற்றமுமெருமையும் பிறப்பினில்வேறே
|