பக்கம் எண் :

கபிலர் அகவல்7

 

அவ்விருசாதியில்
            ஆண்பெண்மாறிக்
கலந்துகருப்பெறல்
            கண்டதுண்டோசொலும்
ஒருவகைச்சாதியா
            மக்கட்பிறப்பிலீர்
இருவகையாகநீர்
            இயம்பியகுலத்துள்
ஆண்பெண்மாறி
            அணைதலுமணைந்தபின்
கருப்பொறையுயிர்ப்பதுங்
            காண்கின்றிலீரோ
எந்நிலத்தெந்தவித்
            திடப்படுகின்றதோ
அந்நிலத்தந்தவித்
            தங்குரித்திடுமலால்
மாறிவேறாகும்
            வழக்கமொன்றிலையே
பூசுரர்ப்புணர்ந்து
            புலைச்சியரீன்ற
புத்திரராயினோர்
            பூசுரரல்லரோ
பெற்றமுமெருமையும்
            பேதமாய்த்தோன்றல்போல்