அவ்விருசாதியில்              ஆண்பெண்மாறிக்  கலந்துகருப்பெறல்              கண்டதுண்டோசொலும்  ஒருவகைச்சாதியா              மக்கட்பிறப்பிலீர்  இருவகையாகநீர்              இயம்பியகுலத்துள்  ஆண்பெண்மாறி              அணைதலுமணைந்தபின்  கருப்பொறையுயிர்ப்பதுங்              காண்கின்றிலீரோ  எந்நிலத்தெந்தவித்              திடப்படுகின்றதோ  அந்நிலத்தந்தவித்              தங்குரித்திடுமலால்  மாறிவேறாகும்              வழக்கமொன்றிலையே  பூசுரர்ப்புணர்ந்து              புலைச்சியரீன்ற  புத்திரராயினோர்              பூசுரரல்லரோ  பெற்றமுமெருமையும்              பேதமாய்த்தோன்றல்போல்  
  |