| பத்துப்பாட்டும்பண்டைத் தமிழரும்
 1. நூலின் விளக்கம் பழந்தமிழ் நூல்களிலே பத்துப்பாட்டு ஒரு சிறந்த நூல். தமிழ் இலக்கியத்திலே தேர்ச்சியுடையவர்களுக்கு இது ஒரு கருவூலம். பண்டைத் தமிழர் நாகரிகத்தை விளக்கிக் காட்டும் ஒரு ஒளிவிளக்கு. பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் சங்ககால இலக்கியங்கள்.  இந்நூலிலே இயற்கைக்கு மாறான கற்பனைகளை எங்கும் காணமுடியாது. பொருளற்ற பொருந்தாத உவமைகளைப் பார்க்க முடியாது. இயற்கைப் பொருள்களின் தோற்றங்களை நாம் நேரே காண்பது போல் இந்நூலிலே படித்தறியலாம். அங்கே நடைபெறும் நிகழ்ச்சிகளையும் கண்கூடாகக் கண்டு மகிழலாம்.  பத்துப்பாட்டு கற்பனைகளும், கதைகளும் நிறைந்த காவியமன்று. கண்ணாற் கண்ட காட்சிகளை அப்படியே அழகாக எழுதியிருக்கும் சொல் ஓவியமாகும்.  இந்நூலின் அருமை பெருமைகளை அறிந்து சுவைத்தவர் ஆசிரியர் சுந்தரம்பிள்ளை. அவர் இந்நூலின் பெருமையைத்  |