பக்கம் எண் :

10 

 

மேல்துண்டில், வடித்த சோறு கொடுத்தல். ஓரோர் அமையங்களில் செலவுக்குப் பணம் தருதல் காவல் நாய்களின் வேட்டையிலிருந்து தப்ப உதவல். பாரதியாரின் ‘இந்தியா’ ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தருதல் ஆஷ் கலெக்டரைச் சுட்ட துப்பாக்கி பாவேந்தர் அனுப்பியதே.

  

1916- 

தந்தையார் (23-1-16) இயற்கை எய்தல்.

  

1918- 

பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால் சாதி, மதம் கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் எழுதும் தேசிய, தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை, தமிழக ஏடுகளில், புதுவை. கே. எஸ். ஆர்; K. S. R. , கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல் காரன். கே. எஸ். பாரதிதாஸன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை, மடல்கள் எழுதுதல், 10 ஆண்டுக்காலம் பாரதியார்க்கு உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.

  

1919- 

திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில் பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம்சாட்டி 1ரு ஆண்டு சிறை பிடித்த அரசு, தவறுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க, வழக்கில் புலவர் வென்று மீண்டும் பணியில் சேர்தல்.

  

1920- 

இந்திய விடுதலை அறப்போராட்டத்தில் பங்கேற்றல், புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகன் பழனி அம்மையை மணத்தல். தம் தோளில் கதர்த்துணியைச் சுமந்து தெருத்தெருவாய் விற்றல்.

  

1921- 

செப்டம்பர் 19-தலைமகள் சரசுவதி பிறப்பு (12-11-21) பாரதியார் மறைவு.

  

1922- 

K. S. பாரதிதாஸன் என்ற புனைபெயரைத் தொடர்ந்து பயன்படுத்தி, தேச சேவகன்; ‘துய்ய ளேச்சு’, ‘புதுவை கலைமகள்’, ‘தேசோபகாரி’, ‘தேச பக்தன்’, ‘ஆனந்தபோதினி’, ‘சுதேசமித்திரன்’