பாவலர் வாழ்க்கை பயன்மரம், ஊருணி. யாவரும் கொள்வீர் இனிது. பாவேந்தர் வாழ்க்கைக் குறிப்புகள் 1891- | ஏப்ரல் 29, புதன் இரவு 10-15 மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை, தாய் இலக்குமி, உடன் பிறந்தோர் : தமையன் சுப்பராயன், தமக்கை சிவகாமசுந்தரி, தங்கை இராசாம்பாள். | | | 1895- | ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் தொடக்கக்கல்வி. இளம் வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில் நற்பெயர் பெற்றார். பத்தாம் வயதிலேயே சுப்பு ரத்தினத்தைப் பெற்றதால் புகழ்பெற்றது புதுவை. | | | 1908- | புதுவை அருகில் உள்ள சாரம்முதுபெரும் புலவர்(மகா வித்துவான்) பு. அ. பெரியசாமியிடமும், பின்னர், பெரும்புலவர் பங்காரு பத்தரிடமும், தமிழ் இலக்கண-இலக்கியங்களையும், சித்தாந்த-வேதாந்தப் பாடங்களையும் கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார். புலவர் சுப்புரத்தினத்தை, வேணு(வல்லூறு) நாயகர் வீட்டுத் திருமணத்தில் பாரதியார் காணும் பேறு பெற்றார். பாரதியாரின் தேர்வுத் ‘தராசி’ல் நின்றார்; வென்றார். நட்பு முற்றியது; பாரதியாரின் எளிய தமிழ், புலமை மிடுக்கேறிய சுப்புரத்தினத்தைப் பற்றியது. | | | 1909- | கல்வி அதிகாரி கையார் உதவியால், காரைக்கால் சார்ந்த நிரவியில் ஆசிரியப்பணி ஏற்றல். | | | 1910- | வ. உ. சி. யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த புலவர்-பாரதியார், வ. வே. சு. , டாக்டர். வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தல், தம் பெற்றோர்க்குத் தெரியாமல் |
|
|