பக்கம் எண் :

8 

பாரதிதாசனின் தொடக்ககாலச் சிறுகதைகளும் பிற்காலச் சிறுகதைகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இதனால் பாரதிதாசனின் நடைவளர்ச்சியை அறிவதற்கும் இத்தொகுதி சிறப்பாகப் பயன்படுகிறது.

பாரதிதாசனின் மாணவர் கவிஞர் புதுவை சிவப்பிரகாசம் ‘பாரதிதாசன் கதைகள்’ என்ற பெயரில் புதுச்சேரி ஞாயிறு நூற்பதிப்பகச் சார்பில் 1955ஆம் ஆண்டு மே மாதம் முதற்பதிப்பினை வெளியிட்டுள்ளார். அந்நூலில் இடம்பெறாத சிறுகதைகள் பல இந்நூலில் இடம்பெற்றுள்ளமை இத்தொகுப்பின் தனித்தன்மையைச் சிறப்பிக்கும் தகுதியாகும்.

-டாக்டர் ச. சு. இளங்கோ