கணக்காயர் “தலை” மனைவியின் “தலை” தனித்தனியான கோலில் கோத்துக் கூட்டத்தில் எடுத்து வரப்படுகின்றன. கணக்காயர் தலை இதோ! மனைவி தலை இதோ! என்றான் வேங்கை : தலைகளைக் கண்ட ஊர்மக்கள் கைகொட்டி மகிழவில்லை. கண்ணீர் சிந்தினார்கள். ஒருவன் கேட்டான். அவர் ஏன் சாகவும் துணிந்தார்? இன்னொருவன் சொன்னான். ஆலமரத்தை வெட்டக்கூடாது என்பதற்காக வேறொருவன் கேட்டான் : சிவன் கோயிலைவிட ஆலமரம் பயன் உள்ளது என்பது கணக்காயர் கருத்தோ? மற்றொருவன் கூறினான் : வேறென்ன? இந்த வினா விடை நீண்டுகொண்டே போகவில்லை. வேங்கையும், சட்டாம்பிள்ளையும் மற்றும் 6 பேரும் வெட்டப்பட்டு அங்கே குழிதோண்டி புதைக்கப்பட்டார்கள். |