22 சுயராச்சியம் வேண்டும்
ஐயா, இங்கிலீஷ்காரர்களே! இந்தியப் பெண்மணிகளும் ஆடவர்களும் சுயராஜ்யத்திற்குத் தகுதியுடையவராகவே இருக்கிறபோது, நீங்கள் ஏன் உங்கள் கையில் வைத்திருக்கிற சுயராஜ்யத்தை, எங்கள் திருவோட்டில் போடக்கூடாது? நாங்கள் சுயராஜ்யத்திற்குத் தகுதியுடையவர்கள் என்பதற்குச் சில திருஷ்டாந்தங்களைத் தெரிந்தெடுத்து, அவைகளிலும் பொறுக்கானவைகளாக இங்குக் கூறுகிறேன். பெண்டிர்கள் எங்கள் இந்திய மாதர்கள் கோலம் போடுவார்கள். அந்தக் கோலமும், அரிசி மாவால் எறும்புக்கு உபயோகமாகும்படி இருக்கிறது. இந்தக் கோலங்களில் இடையில் சித்திரக்கலைகள் திகழும். கிளிகள், மயில்கள், தாமரைப் பூக்கள் இவைகள் எல்லாம் அசல் கிளி, அசல் தாமரைப் பூக்களையே திருத்துவதாக இருக்கும். எங்கள் பெண்கள், சாஸ்திரம் பார்ப்பதில் சமத்தர்கள் ஒரு படியில் ஒரு பேனைப் போட்டு, அதன்மேல் நெல்லை |