பக்கம் எண் :

12 

 

நாடகங்கட்கும், தன்மான, பொதுவுடைமைக் கூட்டங்களுக்கும் பாட்டெழுதித் தருதல்.

  

1933-

ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை ஒயிட்சு நினைவுக் கட்டடத்தில் (31-1-33) நடந்த நாத்திகர் மாநாட்டில் கலந்துகொண்டு வருகைப் பதிவேட்டில் ‘நான் ஒரு நிரந்தரமான நாத்திகன்’ என்று எழுதிக் கையெழுத்திடல்.

  

1933-

மூன்றாம் மகள் ரமணி பிறப்பு

  

1934-

மாமல்லபுரத்திற்கு முழுநிலா இரவில் தோழர் ப. ஜீவானந்தம், குருசாமி, குஞ்சிதம், நயினா சுப்பிரமணியம், மயிலை. சீனி. வேங்கடசாமி, மாயூரம் நடராசன், சாமி சிதம்பரனார், எஸ். வி. இலிங்கம், நாரண துரைக்கண்ணனுடன் படகில் செல்லல்; ‘மாவலிபுரச் செலவு, -பாடல் பிறந்தது. 9-9-34-ல் இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் பெரியார் தலைமையில் நடைபெறல். (குருசாமி இரணியன் - திருவாசகமணி கே. எம். பாலசுப்பிரமணியம் - பிரகலாதன்)

  

1935-

இந்தியாவின் முதல் பாட்டேடான - ‘ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்’ தொடக்கம். இதற்கு உறுதுணையாக இருந்தவர். எஸ். ஆர். சுப்பிரமணியம் (சர்வோதயத் தலைவர். )

  

1936-

பெங்களூரில் பதினான்கு நாள் தங்கி (1-4-36) ‘தேசிங்குராஜன்’ வரலாற்றை அட்கின்சு குழுமத்தார்க்கு ‘இஸ் மாஸ்டர் வாய்ஸ்’ இசைத்தட்டுகளில் பதித்தல்.

  

1937-

புரட்சிக்கவி - குறுங்காவியம் வெளியிடல். ‘பாலாமணி அல்லது பக்காத்திருடன்’ திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இதில் நடித்தவர்கள் : தி. க. சண்முகம் உடன் பிறந்தோர் அனைவரும்.

  

1938- 

பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியைக் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி வெளியிட்