பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்121

பண்ணி விட்டாலும் சரி, கைத்தொழில் ஐந்து தெரியாதவராக இருப்பாரானால் அப்படிப்பட்ட காளைகளின் தோளை அங்கீகரிப்பாளா (அங்கீகரிப்பேனா) ஒருபோதுமில்லை. இவள் (நான்) இன்னும் எப்படிப்பட்டவள் தெரியுமா (மெய் ஐந்து) உடற் குற்றம் ஐந்தும் நீங்கப் பெற்ற மின்னல் போன்ற இடை யுடையவள். ஐயைந்து இருபத்தைந்து பொருள் என்றால் என்ன?மலைபடு திரவியம் மிளகு, கோட்டம், அகில், தக்கோலம், குங்குமம்.

காடுபடு திரவியம் :

இறால் (தேன் கூடு மெழுகு) தேன், அரக்கு, மயிற்பீலி (மயிலிறகு) நாவி (கஸ்தூரி)

  

நாடுபடு திரவியம் :

செந்நெல், சிறுபயிறு (நவதானியம்) கரும்பு, வாழை, செவ்விளநீர்.

  

நகர்படு திரவியம் :

அரசன், பித்தன், மந்தி, யானை, கண்ணாடி.

  

கடல்படு திரவியம் :

உப்பு, முத்து, பவளம், சங்கு, ஒக்கோலை (அம்பர்)

  

உடற் குற்றம் ஐந்து :

கொட்டாவி, நெட்டை, குறு குறுப்பு, கூன் இடை, நட்டு விழுதல்

  

கைத்தொழில் ஐந்து :

எண்ணல் (கணிதப் பயிற்சி) எழுதல் (எழுத்து வன்மை)

இலை கிள்ளல், பூத்தொடுத்தல், யாழ் வாசித்தல்

மன்மதன் கணை ஐந்து : தாமரைப்பூ, மாம்பூ, அசோகப் பூ, முல்லைப்பூ, கருநெய்தற்பூ (நீலோற்பலம்)

அந்தக் காலத்தில் ஆடவன் கல்வித்தேர்ச்சியும், வீணை வாசித்தலாகிய கலைத்தேர்ச்சியும், திருத்தொண்டும், உடையவனாக இருத்தல் வேண்டும் என்று தெரிதலால் அந்நாள், தமிழ்நாட்டின் பெருநிலையும் நமக்கு விளங்குகிறது.

இந்த வெண்பாவை அதன் பொருளோடு வரப்படுத்தி வையுங்கள்.