பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்29

4
கடவுள் மகத்துவம்


(ஒரு சிறு கதை)

உடம்பு சிலிர்க்கிறது! நல்ல உயரம்! நெற்றி நிறையத் திருநாமம்! செக்கச் செவேலென்று 60 வயதிருக்கும். என்னை வந்து தட்டியெழுப்பினார். நான், ‘ஆர் ஐயா?’ என்று கேட்டேன் (கோபமாக). ‘என்னை அவமதிக்கிறீர்கள். புரட்டாசி மாதத்து விரதத்தைக் கைவிட்டீர்கள். எனக்கு வருகிற சனிக்கிழமை தளியல் போடு, இந்தா இதைப்பிடி’ என்று சொன்னார். கையில் வாங்கினேன். அப்போதுதான் மலர்ந்த மாதிரி இருந்தது. அத்தனையும் மல்லிகைப் பூக்கள் அதற்குள் விழித்துக் கொண்டேன்.

இந்தக் கனவின் பலன் என்ன என்று கேட்டாள் மனைவி தங்கம்.

புருடன் :

அதற்கென்ன இந்தச் சனிக்கிழமை தளியல் போட்டுவிடலாம். கனவில் வந்தவர் பெருமாளாகத் தான் இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமையன்று வீதிமுனை மாரியம்மனுக்குப் பிரார்த்தனைக்காரர் ஒருவர் அபிஷேகம் செய்து வைத்து