பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்41

இதற்குள் தங்கமாச்சாமி :

நீதான் வாங்கிக் கொள்ளேண்டி! என்றது.

  

மொட்டைச்சாமி :

வேண்டுமென்றே அந்தக் கிழவி ‘என்னிடம் அத்தனை பெரிய கற்பூரக் கட்டியைக் கொளுத்திக் கொடுக்கப் பார்க்கிறாள்! ’ என்றது.

  

தங்கமாச்சாமி :

நீ ஒரு முண்டம்! சொன்னதென்ன? நீ செய்கிறதென்ன? என்று, முன் தாங்கள் முடிவு செய்திருந்ததைக் குறிப்பிட்டுத் திட்டிற்று.

  

கிழவி :

பிடி, திருப்பழத்தை!

  

மொட்டை :

முதலில் திருப்பழத்தைக் கொடு! பிறகு கற்பூரத்தைக் கொடு! பெரிய மனுஷிகள் சிரித்தார்கள்!

  

கிழவி :

இரண்டும் ஒன்றுதானே!

  

மொட்டை :

“ஓகோ! என்னையா ஏமாற்றப் பார்க்கின்றாய்? என்று சொல்லி, அங்கு வைத்திருந்த வாழைப்பழச்சீப்பை எடுத்துக்கொண்டு, கொளுத்திய கற்பூரத்தை ஊதி வாயில் போட்டுக்கொண்டு மலையேறிற்று. மீதி ஆறு சாமிக்கும் இது பிடிக்கவில்லை. ஆறுசாமியும் ஒரே வாக்காய், “கேட்க வேண்டியதை உடனே கேளுங்கள்! நாங்களும் மலையேற வேண்டும்! ” என்றன!

  

ஒரு கேள்வி :

பிள்ளை பிறக்குமா?

  

பதில் :

ஆண்பிள்ளை பிறக்கும்.

  

இன்னொரு கேள்வி :

பையனுக்கு உத்தியோகம் கிடைக்குமா?

  

பதில் :

அடுத்த மாதத்தில் 100 ரூ உத்தியோகம்.

  

இன்னொரு கேள்வி :

கணவர் பிழைப்பாரா?

  

பதில் :

இன்னும் 8 நாட்களில் வேலைக்குப் போவார்.

  

வேறொரு கேள்வி :

அந்தக் கிழவர் (கேட்பவளின் தங்கையின் புருஷன்) வெகுநாட்களாய்ப் படுத்த படுக்கையாய்க் கிடக்கிறாரே?