ராமன் : | பரதன் என்னைத்தானே பட்டங் கட்டிக் கொள்ளச் சொல்லுவான். | | | கைகேசி : | மெய்தான். நன்றாக ஞாபகப்படுத்தினாய். எனது மற்றோர் அதிகாரத்தால் சீதையையும் நீ உடன் கூட்டிப்போக உத்தரவிடுகிறேன். என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள் அல்லது இவ்விரு தமிழ்ப்பெண்களை எதிர்த்துப் பாருங்கள். | | | மந்தரை : | ராமா நீதான் அதிர்ஷ்டசாலி. இப்போதுதான் உனது சீதை உனக்குக் கிடைத்தாள். |
ராமன், சீதை, லக்ஷு மணன் சகிதம்காடு சென்றான். இதில் ராமனுக்கு ஒரு வகையில் சந்தோஷமே. டெலிபோன் படலம் முற்றிற்று. மந்தரை திருவடிகளே சரணம். |