பக்கம் எண் :

6 

சிறுகதைகளும் எழுதியுள்ளார் பாரதிதாசன் என்ற செய்தி பலருக்கு வியப்பூட்டுகிற உண்மையாகத் திகழ்கிறது. கதைகளைப் பாட்டு வடிவத்தில் கூறுவதில் தொடக்கப்காலப் பாரதிதாசனுக்கு இருந்த அக்கறை, அதே அளவிற்குக் குறையாமல் உரைவடிவத்தில் கூறுவதிலும் இருந்தது.

அரசியல், இலக்கியம், சமூகம் பற்றிய நோக்கிலான வார, மாத இதழ்களில் எழுதுவது பாரதிதாசனுக்கு ஒர் இன்றியமையாத பணியாக அமைந்த பிறகு, அவற்றில் வெளிவரத்தக்க உரைவடிவப் படைப்புகளையும் செய்ய நேரிட்டது. பாட்டின் வேந்தர் என்றே அவர் சிறப்பிக்கக்பட்டதாலும், அவருடைய உரைநடைகளைத் தொகுக்கிற முயற்சியில்லாததாலும் பாரதிதாசனின் உரைநடைப் படைப்புகள் அச்சேறாமல் முடங்கிக் கிடந்தன. புரட்சிக்கவிஞரின் சிறப்புத்தன்மைகள் பாட்டில் போலவே உரைநடையிலும் ஒளிருவதால் உரைப்படைப்புகளையும் ஏற்று பாரதிதாசன் ஆராயப்படுதல் வேண்டியுள்ளது.

கதை என்பது ‘கதா’ என்ற வடசொல்லின் திரிபு எனக் கூறும் கருத்தினைப் பாரதிதாசன் ஏற்கவில்லை. “கதுவல்-பற்றுவது; தொழிற்பெயர். கது என்பது முதனிலைத் தொழிற்பெயர். இதுவே முதனிலை திரிந்த தொழிற் பெயராய்க் காது என வரும். காது-ஒலியைப் பற்றுவது. இது கது-‘ஐ’ என்ற தொழிற்பெயர் இறுதிநிலை பெற்று கதை என்றாகும். ‘கதை’ அனைத்தையும் ஒரு முதனிலையாகக் கொண்டு கதைத்தல் என்றும் குறிக்கலாம். கதை-நடந்த கேட்கப்பட்ட கருத்தைப் பற்றுவது என்று பொருள் கொள்க” (குயில், குரல்-2, இசை 12; 29. 9. 1959). கதை என்பது தூய தமிழ்க்காரணப்பெயர் என்றும் அது வடசொல் அன்று என்றும் இத்தமிழ்ச்சொல்லையே வடவர் எடுத்தாண்டு கொண்டனர் என்றும் பாரதிதாசன் சொல் விளக்கம் செய்துள்ளார்.

பாரதிதாசன் சிறுகதைகள் மட்டுமல்லாமல் நெடுங்கதைகளும் எழுதியுள்ளார். ‘கெடுவான் கேடு நினைப்பான்’